மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டண அறிவிப்பை முன்தேதியிட்டு அமல்படுத்தக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கடலூர் மாணவிகள்சார்பில்வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின், முந்தைய விசாரணையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா இரண்டு இடங்களைஅதிகரிக்க முடியமா? எனச் சென்னைஉயர்நீதிமன்றம், தேசியமருத்துவ ஆணையத்திடம் கேள்விஎழுப்பியிருந்தது.
அப்படி, தலா 2 மருத்துவ இடங்களைஅதிகரித்தால், 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் இடம்பெற்றுகட்டணம்செலுத்தமுடியாமல் தவிக்கும், 51 பேருக்குபடிக்க வாய்ப்பு கிடைக்கும். அகில இந்தியஒதுக்கீட்டில், கலந்தாய்வு முடிவில், 7.5 சதவிகித ஒதுக்கீட்டின் கீழ், 12 இடங்கள்கிடைக்கும். இதனால் காத்திருப்போர் பட்டியலில்உள்ள மாணவர்களுக்கு மருத்துவஇடங்கள் கிடைப்பதோடு, மாணவர்களுக்கு புதியஉத்வேகமும்கிடைக்கும்எனச் சென்னைஉயர்நீதிமன்றம் தெரிவித்தது.
அரசுப் பள்ளி மாணவர்கள் மீதான இந்தச் சமூகத்தின்பார்வையைமாற்ற, இது ஒரு நல்வாய்ப்பாக அமையும்என நீதிமன்றம் கருத்துத் தெரிவித்து, இது தொடர்பாகதேசியமருத்துவ ஆணையம்டிசம்பர் 17-ஆம் தேதி, பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கைஒத்திவைத்திருந்தது உயர்நீதிமன்றம். தற்பொழுது, இந்த வழக்கில்7.5 சதவிகித இடஒதுக்கீட்டில், மருத்துவ இடம் கிடைக்காதவர்கள் உச்சநீதிமன்றத்தை நாடலாம் எனத்தேசிய மருத்துவ ஆணையம், வாதத்தை முன்வைத்துள்ளது.அதேபோல் மருத்துவக் கல்லூரியில், மேலும் 2 மருத்துவஇடங்களைஉருவாக்கஉயர்நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்ற வாதத்தையும்தேசிய மருத்துவஆணையம் நீதிமன்றத்தில்முன்வைத்துள்ளது.