Skip to main content

சென்னை அண்ணா நகரைவிட ஸ்டெர்லைட் வளாகம் பாதுகாப்பானது!- வேதாந்தா தரப்பு வாதம்!

Published on 20/12/2019 | Edited on 20/12/2019

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அறிக்கைபடி மக்கள் வாழ்வதற்கு சென்னை அண்ணா நகரை விட ஸ்டெர்லைட் வளாகம் பாதுகாப்பானது என வேதாந்தா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகளை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு விசாரித்து வருகின்றனர்.

THOOTHUKUDI STERLITE ISSUES CHENNAI HIGH COURT


 

நேற்று (19- ஆம் தேதி) வாதம் நடைபெறும் 32- வது நாள். வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.எஸ் ராமன், 1995- ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை திறந்த போது போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்கள், அதன் பின்னர், 2013- ஆம் ஆண்டு ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

ஆனால் 2017- ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து திடீரென ஸ்டெர்லைட் நிர்வாகத்தை முழுமையாக மூட வேண்டும் என போராட ஆரம்பித்தனர். 2018- ஆம் ஆண்டு மே 21- ஆம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, மே 23- ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.

THOOTHUKUDI STERLITE ISSUES CHENNAI HIGH COURT

அதேபோல, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கும், ஸ்டெர்லைட் ஆலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. துப்பாக்கிச் சூட்டை தமிழக அரசுதான் நடத்தியது. ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்னர் தூத்துக்குடியில் காற்று மற்றும் நீர் மாசு குறைந்து விட்டதாக அரசு கூறுவது தவறு.
 

வேலூர் தோல் தொழிற்சாலை, திருப்பூர் நூல் ஆலைகளை விட ஸ்டெர்லைட் ஆலை அதிக மாசு ஏற்படுத்துகிறதா? மேலும், தூத்துக்குடி சிப்காட்டில் மாசு ஏற்படுத்தக் கூடிய ஆலைகளை மூட வேண்டும் என்றால், முதலில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தைத்தான் மூட வேண்டும்.
 

அதுபோல, அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வின் படி, தூத்துக்குடியில் லட்சத்தில் 63 பேர் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தமிழகத்தின் ( லட்சத்தில் 80 பேர்) அளவை விட குறைவு.
 

மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அறிக்கைபடி மக்கள் வாழ்வதற்கு சென்னை அண்ணா நகரை விட ஸ்டெர்லைட் வளாகம் பாதுகாப்பானது என்றும் மனித உடல்நல குறியீட்டின் பட்டியலில் தூத்துக்குடி 3- வது இடத்தில் உள்ளது.
 

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆய்வுபடி ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்னரும் தூத்துக்குடியில் காற்று மாசில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து 90 AQI (Air Quality Index) அளவில் தான் உள்ளது. இது சென்னை, டெல்லியை விட குறைவானதுதான் என தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இன்றும் (20.12.2019) விவாதம் தொடர்கிறது.




 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.