சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை மீண்டும் இயக்க அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் வழக்கு விசாரணை குறித்து சிபிஐயிடம் கேள்வி எழுப்பியது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விசாரணையின் நிலை அறிக்கை வரும் செப்டம்பர் 16ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தகவல். அதில் செப்டம்பர் 16- ஆம் தேதி வரை நடத்தப்பட்ட விசாரணை குறித்து சிபிஐ உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.
மேலும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாகவும், அதிகாரிகள் தொடர்பு சம்பந்தமாகவும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ உயர்நீதிமன்றத்தில் தகவல். அதேபோல் பல்வேறு துறைகளிடமிருந்து ஆவணங்கள் பெறப்பட்டுள்ளது.சிசிடிவி பதிவுகள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சுட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்றும், நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்