Skip to main content

எஸ்.ஐ. உயிரிழப்பு... விபத்தா..? கொலையா..?

Published on 23/02/2020 | Edited on 23/02/2020

குறிப்பிட்ட சிலர் தன்னைக் கொலை செய்ய வருகின்றார்கள் என இரவு ரோந்துப்பணியில் இருந்த எஸ்.ஐ.-க்கு தகவல் வர, சம்பவ இடத்திற்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். எஸ்.ஐ. இது நின்றுக் கொண்டிருந்த லாரி மீது மோதியதால் ஏற்பட்ட விபத்து என ஒரு சாரரும், மணல் திருடர்களால் நடத்தப்பட்ட கொலை என மற்றொரு சாரரும் சந்தேகம் எழுப்பிய நிலையில், மாவட்ட காவல்துறை எஸ்.ஐ.யின் மர்ம மரணத்தை ஆராய்ந்து வருகின்றது.


சனிக்கிழமை இரவு 11.00 மணிக்கு, "மாசார்பட்டி காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட அச்சங்குளம் கிராமத்திலிருக்கும் அந்தோணி முருகன் என்பவரை சிலர் வெட்ட வருவதாக போன் தகவல் கிடைக்க", மேலக்கரந்தை எனும் பகுதியில் இரவு ரோந்துப் பணியிலிருந்த மாசார்பட்டி காவல்நிலைய எஸ்.ஐ. சிவசுப்பிரமணியம் அங்கிருந்து அச்சங்குளம் பகுதிக்கு TN69A. 8055 என்ற எண் கொண்ட தன்னுடைய பல்சர் வாகனத்தில் விரைந்திருக்கின்றார். அப்பொழுது அந்த மதுரை டு தூத்துக்குடி NH38 ரோட்டில் ஏற்கனவே TN.69.U.3399 எண் கொண்ட லாரி நின்று கொண்டிருந்ததாகவும், சரியாக அதனை கவனிக்காத எஸ்.ஐ.யோ, அந்த லாரியின் பின்புறத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்." என எஸ்.ஐ. சிவசுப்பிரமணியத்தின் மரணத்திற்கு குறிப்பு எழுதி, உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை.

thoothukudi police si incident police investigation

"அவரது மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளது. மேலகரந்தை பகுதியில் தான் இரவு ரோந்து பணியிலிருக்கின்றார் எஸ்.ஐ. அங்கிருந்து குறிப்பிட்ட சில மீட்டர் தூரத்திலேயே எப்படி லாரியின் பின்புறத்தில் மோதி உயிரிழந்திருக்க முடியும்? அந்த கொலை மிரட்டல் போன் யாருக்கு வந்தது? யார் மூலம் தகவல் எஸ்.ஐ.க்கு தகவல் கூறப்பட்டது? இந்த மாசார்பட்டி காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட கீழ்நாட்டுக் குறிச்சி, கைலாசபுரம் ஆகிய பகுதியிலுள்ள வைப்பாற்று படுகையில் மணல் திருட்டு அதிகம். அதனைக் கண்டித்ததாலோ இவர் விபத்து எனும் பெயரில் கொலை செய்யப்பட்டிருக்கலாம். முறைப்படி விசாரணை செய்து உண்மையை அறிய வேண்டும்." என காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.


மர்மமான முறையில் உயிரிழந்துள்ள தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி காவல்நிலைய எஸ்.ஐ. சிவசுப்பிரமணியத்தின் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா குருவிகுளம் அருகிலுள்ள அத்திபட்டி கிராமம். 2011ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த எஸ்.ஐ-க்களில் ஒருவரான இவர் முதலில் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் பயிற்சி எஸ்.ஐ.யாகவும், அதன் பின் எட்டையபுரம், திருச்செந்தூர் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட பல காவல் நிலையங்களில் பணியாற்றி வந்தவர். 7 மாத கர்ப்பிணியான இவருடைய மனைவி பெயர் சுப்புலட்சுமி. இரண்டரை வயது பெண் குழந்தையின் பெயர் சக்திஸ்ரீ. இவருடைய மர்ம மரணத்தால் இப்பகுதியில் பதட்டம் நிலவி வருகின்றது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.