Skip to main content

ஓடைக்கு மழை நீர் வரும்...ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றிய மாவட்ட நிர்வாகம்!

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் சர்வே நம்பர் 139, 214, 266, 337 ஆகிய அரசு ஓடை புறம்போக்கு வகைப்பாட்டில் உள்ள நிலங்கள் ஸ்ரீபூவனநாத சுவாமி திருக்கோயில் தேவஸ்தான பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில் கோயில் கட்டுப்பாட்டில் 106 கடைகளும், தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் 25 கடைகளும் கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தன. இதனை அகற்ற வலியுறுத்தி கோவில்பட்டி நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு மீட்பு குழு சார்பில் பல்வேறு தொடர் போராட்டங்கள் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டன. ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கடந்த 19.3.2018 மற்றும் 26.4.2018 கடைக்காரர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 


இதனிடையே பூவனநாத சுவாமி திருக்கோயில் தேவஸ்தான பயன்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் சிலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு இடைக்கால தடை உத்தரவு பெற்றுள்ளனர்.
 

thoothukudi kovilpatti Rain water coming to the stream District administration to drastically eliminate occupation


இந்நிலையில் மழைக்காலங்களில் மழைநீர்  ஓடையில் செல்ல போதிய வழிகள் இல்லாததால் பிரதான சாலையில் தேங்கி பொதுமக்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படுவது தொடர்வதால் ஆக்கிரமிப்பாளர்கள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே முன்வந்து அகற்றி கொள்ள கடந்த 17.8.2019ல் டி.ஆர்.ஓ. வீரப்பன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன. 


அதன் தொடர்ச்சியாக நீதிமன்ற தடை உத்தரவில் குறிப்பிட்டுள்ள கடைகளை தவிர்த்து, இதர தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்து ஓடையின் மீது கட்டப்பட்டுள்ள கடைகளை 23.8.19-ம் தேதி மாலை 5 மணிக்குள் காலி செய்திட வேண்டுமென்றும், தவறும் பட்சத்தில் 24.8.19-ம் தேதி காலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்  என வட்டாட்சியர் பி.மணிகண்டன் நோட்டீஸ் வழங்கியிருந்தார்.
 

thoothukudi kovilpatti Rain water coming to the stream District administration to drastically eliminate occupation

 

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின்படி வருவாய்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, மின்வாரியம், காவல்துறை அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி சனிக்கிழமை அனைத்து துறை அதிகாரிகள், பணியாளர்கள் காலை 5.30 மணியளவில் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் போலீஸார் யாரும் வரவில்லை. இதுக் குறித்து வட்டாட்சியர் மணிகண்டன், டி.எஸ்.பி. ஜெபராஜை தொடர்பு கொண்டபோது காவலர்கள், தூத்துக்குடியில் நடைபெறும் 2-ம் நிலை காவலர் தேர்வு பணிக்காக சென்றுவிட்டனர் என தெரிவித்துள்ளார்.
 

ஆக்கிரமிப்புகள் அகற்ற போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என வெள்ளிக்கிழமை இரவு தெரிவித்த டி.எஸ்.பி.  சனிக்கிழமை காலையில் போலீஸ் தேர்வு பணிக்கு அனைத்து காவலர்களும் சென்று விட்டனர் என கூறியதால், அதிர்ச்சியடைந்த வருவாய்த்துறையினர் உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அனுப்பி அடுத்த கட்ட உத்தரவுக்காக காத்திருந்தனர். இதனால் ஆக்கிரமிப்புகள் அன்றைய தினத்தில் அகற்ற முடியவில்லை.

தற்பொழுது திங்களன்று போதிய பாதுகாப்பினை போலீசார் நல்கிட, வருவாய்த்துறையினரும் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்றி வருகின்றனர். 60 ஆண்டுகளாக ஓடைக்கு நீர்வரத்து செல்லாததால் நீரை சேமிக்க இயலாத கோவில்பட்டி மக்கள் இச்சம்பவத்தால் பெருமகிழ்வடைந்து மாவட்ட நிர்வாகத்திற்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.