Skip to main content

கோவில்பட்டி யூனியன் சேர்மன் தேர்தலில் அ.திமு.க.வின் கஸ்தூரி வெற்றி... திமுகவினர் சாலை மறியல்!

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

கோவில்பட்டி யூனியன் சேர்மன் தேர்தலில் அ.திமு.க.வின் கஸ்தூரி வெற்றி. மறியலில் தி.மு.க. கவுன்சிலர்கள் அடிதடி தீக்குளிக்க முயற்சி. 19 வார்டுகளைக் கொண்ட கோவில்பட்டி யூனியனில் தி.மு.க. 8 கூட்டணியான சி.பி.ஐ. 1 என 9 பேர் தேர்வானர் என்ற நிலையில் பெருபான்மைக்குத் தேவையான ஒரு கவுன்சிலர் வேண்டிய நிலையில் தி.மு.க. தரப்பு சேர்மன் பதவியை வசமாக்க 2 சுயேட்சைக் கவுன்சிலர்களை வளைத்து 11 என்ற பெரும்பான்மைத் தக்க வைத்தது. 


அதேசமயம் அ.தி.மு.க. தரப்பிலோ அ.தி.மு.க கவுன்சிலர்கள் 5 கூட்டணி தே.மு.தி.க. சேர்த்து 6 கவுன்சிலர்கள் என்றான போது சுயேட்சை கவுன்சிலர் 2 பேர்களை தங்கள் பக்கம் கொண்டு வர அ.தி.மு.க. விற்கு 8 என்ற எண்ணிக்கை. சேர்மன் பதவியைப் பெற 2 கவுன்சிலர் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

thoothukudi kovilpatti chairman election admk candidate win


கடந்த 11ம் தேதியன்று நடந்த சேர்மன் தேர்தலில் தி.மு.க.வின் பலம் 11, என்ற நிலையில் அ.தி.முக.வின் பலம் 8 ஆக இருந்தது. அது சமயம் திடீர் ட்விஸ்ட்டாக தேர்தல் நடத்த வேண்டிய அதிகாரியான ஜெயசீலனுக்கு திடீர் நெஞ்சுவலி. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் காரணமாக தேர்தல் ஒத்திவைப்பு என அறிவிக்கப்பட்டது.
 

அதன்பின் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் ஜன 30 ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது இன்றைய தினம் கோவில்பட்டி யூனியனில் பரபரப்பு. போலீஸ் காவல் டைட் செய்யப்பட்டது. சரியாக காலை பத்து மணியளவில் தி்.மு.க. அ.தி.முக. கவுன்சிலர்கள் யூனியன் அலுவலகம் வந்தனர். தேர்தல் அதிகாரியான மாவட்டப் பஞ்சாயத்தின் இணை இயக்குனர் உமாசங்கர் வருகைப் பதிவேட்டைப் பதிவு செய்தார். 


பின்னர் அ.தி.முக. தரப்பில் சேர்மன் வேட்பாளர் கஸ்தூரியும், தி.மு.க. தரப்பில் பூமாரியும் சேர்மன் வேட்பாளருக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். பின்னர் 11.00 மணியளவில் வாக்குப் பதிவு நடந்தது. இதில் தி.மு.க. பக்கமிருந்த 11 கவுன்சிலர்களில் 16- வது வார்டு தி.மு.க. கவுன்சிலரான அன்புக்கரசி அ.தி.முக. விற்கு அணி தாவி வாக்களித்தாராம். ஆனாலும் தி.மு.க. தரப்பிற்கு பெரும்பான்மை பலமாக 10 இருந்தது.
 

பின்னர் நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க. தரப்பிற்கு 10 வாக்குகள் தி.மு.க. தரப்பிற்கு 9 வாக்குகளும் கிடைத்ததால் அ.தி.மு.க.வின் கஸ்தூரி சேர்மன் என்று தேர்தல் அதிகாரி உமாசங்கர் அறிவிக்க, அரங்கில் பரபரப்பு தி.முக. கவுன்சிலர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். 

thoothukudi kovilpatti chairman election admk candidate win


அரிபுரியில் அ.தி.மு.க. கஸ்தூரி சேர்மன் என அதிகாரி பதிவு செய்ய, தி.மு.க. கவுன்சிலர்களோ நாங்கள் 10 பேர் தி.மு.க.விற்கு வாக்களித்தோம். இதோ ஒன்றாக உள்ளோம். வாக்குச் சீட்டை எங்களிடம் காட்டுங்கள். இல்லையேல் மறு எண்ணிக்கை நடத்தப்படவேண்டும் என்ற தி்.மு.க கவுன்சிலர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
 

பெரும்பான்மை பலம் எங்கள் பக்கம்தான் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக அதிகாரி மாற்றி அறிவிக்கிறார். மறுதேர்தல் நடத்தப்படவேண்டும்.என்ற கோரிக்கையோடு தி.மு.க. கவுன்சிலர்கள் 10 பேர்களும் சாலைமறியலில் ஈடுபட, உடன் தி.முக.வினரின் கூட்டம் திரண்டது. 


யூனியன் சாலை பதட்டமானது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸ் விரட்டியடித்த பிறகும் தி.மு.க.வினர் சாலை மறியலைக் கைவிடவில்லை. எங்கள் கட்சியின் கவுன்சிலர் அன்புக்கரசி அணி மாறினாலும் எங்கள் பலம் 10. நாங்கள் தி.மு.க.வுக்கு வாக்களித்தோம். இதோ ஒன்றாக உள்ளோம். ஆளுங்கட்சிக்குச் சாதகமாக தேர்தல் அதிகாரி மாற்றி முறைகேடாக அறிவிக்கிறார். எங்கள் கோரிக்கையை அவர் ஏற்கவில்லை. நாங்கள் நீதிமன்றம் செல்வோம் என்கிறார் கவுன்சிலர் பாரதி.

thoothukudi kovilpatti chairman election admk candidate win

ஸ்பாட்டுக்கு வந்த எம்.பி.கனிமொழியும், மா.செ.கீதாஜீவனும், ஆளுங்கட்சி தனக்குச் சாதகமானவரை தேர்தல் அதிகாரியாக நியமித்துள்ளனர்.  முறைகேடாக அறிவிக்கிறார்கள். எங்களிடம் 10 கவுன்சிலர்கள் உள்ளனர். நாங்கள் தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என்றனர் மறியலில் இருந்தவாறு.
 

முறைகேடான அறிவிப்பைக் கண்டித்து சரவணன் என்பவரும் வயதான அவரது தாய் லட்சுமி இருவரும் தீக்குளிக்க முயன்றது தடுக்கப்பட்டது. கோரிக்கை ஏற்காத வரை எங்களின் சாலை மறியல் போராட்டம் தொடரும் என்கிறார்கள் தி.மு.க. தரப்பினர். பதற்றமும், உஷ்ணமும் பரவுகிறது கோவில்பட்டி ஏரியாவில்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.