Skip to main content

கபடி போட்டியில் தகராறு... படுகாயமடைந்த இளைஞருக்கு தீவிர சிகிச்சை! 

Published on 11/09/2019 | Edited on 11/09/2019

தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் கடந்த 2 நாட்களாக கபடி போட்டி நடத்தப்பட்டது. 

தேவேந்திர குல வேளாளர் இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் கலந்து கொண்ட ரெகுராமபுரம் அணி தோல்வி அடைந்து வெளியேறியது. அப்போது, அவர்கள் போட்டி நடத்தியவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்த சங்கரபாண்டி(25) என்ற இளைஞரை, ரெகுராமபுரம் அணியை சேர்ந்தவர்கள் சரமாரி தாக்கி உள்ளனர். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

thoothukudi Kabaddi match dispute  Intensive care for injured youth police investigate


சங்கரபாண்டி அளித்த புகாரின் பேரில் 3 பேரை பிடித்து சங்கரலிங்கபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால்,  தாக்குதல் நடத்தியவர்களில் பட்டாலியனில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவரும் இடம்பெற்றதாக தெரிகிறது. அவருடைய பெயரையும் சங்கரபாண்டி புகாரில் குறிப்பிட்டு உள்ளார். ஆனால், 'பாட்டாலியன் போலீஸ்காரர்' பெயரை வழக்கில் சேர்க்க போலீஸார் தயங்குவதாக சொல்லப்படுகிறது. மேலும், மோதலில் ஈடுபட்டவர்கள் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இரு தரப்பினரும் சமாதானமாக செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்துவதாக தெரிகிறது.

ஆனால், தாக்குதலுக்கு ஆளானவர் திமுக நிர்வாகியின் மகன். எனவே, நாளை இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் முடிந்த பிறகு, இந்த விவகாரத்தை பற்றி பேசுவோம் என காவல் துறை காலம் தாழ்த்துவதாக சொல்லப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.