Advertisment

சிங்கம் திரைப்பட செட்டுக்குள் கொலை... போலீசார் விசாரணை!

thoothukudi incident Police investigation!

Advertisment

சிங்கம்-2 திரைப்படத்திற்கு போடப்பட்டிருந்த செட்டில் இளைஞர் ஒருவரின் சடலம், கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி ஜார்ஜ் சாலையில் உள்ளது பழங்கால கட்டிடம். இந்த கட்டிடத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான சிங்கம் 2 திரைப்படத்திற்கு காவல் நிலையம் போன்று செட் அமைக்கப்பட்டு சூட்டிங் நடைபெற்றது. திரைப்பட சூட்டிங் முடிந்த பிறகு இந்த கட்டிடம் கேட்பாரற்று பாழடைந்த இடமாக மாறிவிட்ட நிலையில், இந்த கட்டிடத்திற்குள் தூத்துக்குடி தெற்கு சம்பந்தமூர்த்தி தெருவைச் சேர்ந்த பிரபு என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவரைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ள போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

incident Thoothukudi police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe