Skip to main content

காத்திருந்து முடித்த பகை.!! கொலையாளிகளுக்கு கை கொடுத்ததா போலீஸ்..?

Published on 28/08/2019 | Edited on 28/08/2019


 

ஆயுதம் தூக்கியவன் ஆயுதத்தாலயே அழிவான் என்பது வழக்கு சொல். அதை மெய்ப்பிக்கும் வகையில் பழிக்குப்பழியாக அதே ஆயுதத்தாலேயே அழிக்கப்பட்டுள்ளான் பல கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவனும் தூத்துக்குடியில் பிரபல தாதாவாக வலம் வந்தவனுமான சிந்தா எனும் சரவணன். இதற்கு பின்னணியில் காவல்துறை இருக்கலாம் என்பது தான் சர்ச்சைக்குரியதாகியுள்ளது.

 

saravanan nellai



தூத்துக்குடி மாதா நகரை சேர்ந்த சிந்தா எனும் சரவணனுக்கு அவ்வவ்ப்போது மீன்பிடித் தொழிலும், தினசரி கட்டப்பஞ்சாயத்தும் செய்து வருவது தான் வழக்கமான ஒன்று. முதல் மனைவி பிரியாவை விட்டு பிரிந்து, இரண்டாம் மனைவி கார்த்திகாவுடன் குடும்பம் நடந்தி வந்துள்ளான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறைத்தண்டனையிலிருந்து வெளிவந்து, தனது பாதுக்காப்பு கருதி கேவிகே நகரில் குடிபெயர்ந்துள்ளான். இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் 5 பேர் கொண்ட மர்மக்கும்பல் இவனை வீட்டியேலேயே வைத்து வெட்டித் துண்டாக்கி கொன்று போட்டது. சம்பவ இடத்தினைப் பார்வையிட்ட மாவட்ட எஸ்.பி. அருண்பால கோபாலன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 



 

இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி பரப்பரப்பை உண்டாக்கியது. கொலையுண்ட சிந்தா எனும் சரவணன் மீது 2009ம் ஆண்டு முன்னாள் பாமக பிரமுகர் காசிப்பாண்டியனைக் கொலை செய்த வழக்கு, 2016ம் ஆண்டு சாயல்குடியில் பட்டுராஜனை கொலை செய்த வழக்கு, ஆறுமுகநேரியில் ஒரு கொலை வழக்கு, நாகர்கோவிலில் ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட  11 வழக்குகள் உள்ளன. இதில் சாயல்குடியில் கொல்லப்பட்ட பட்டுராஜன் தரப்பே இதனை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர் போலீசார்.
 

 
இது இப்படியிருக்க, " தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தை சேர்ந்த சுப்பிரமணிய நாடாரின் மகனான பட்டுராஜ் ஆரம்பத்தில் பந்தல் தொழில் செய்யும் வேலையை செய்து வந்திருக்கிறான். 80களின் இறுதிகளில் அந்தப் பகுதியில் திண்டுக்கல்லில் கொலையுண்ட பசுபதி பாண்டியனுக்கும், அங்கு காமராஜர் மக்கள் கழகம் என்ற அமைப்பினை நடத்தி வந்த காக்கா மண்டையன் செல்வராஜ் நாடாருக்கும் மோதல்கள் வெடித்துக் கொள்ளும். அது சாதி மோதலாக மாற்றப்பட்ட நேரத்தில் பட்டுராஜ் காக்காமண்டையனுடன் சேர்ந்து பசுபதிப் பாண்டியனை எதிர்த்து வந்தான். அலங்காரத்தட்டில் வீட்டைக் காலி செய்யும் பஞ்சாயத்தில் பங்கு பிரிப்பதில் காக்கா மண்டையனுக்கும், பட்டுராஜூவுக்கும் மோதல் ஏற்பட பாளையங்கோட்டையை சேர்ந்த கராத்தே செல்வின் நாடாரின் இயக்கத்தில் சேர ஆரம்பித்து, அவரை முன்னிறுத்தி தூத்துக்குடியில் மாநாடே போட்டான். அதே காலக்கட்டத்தினில் பசுபதி பாண்டியனுக்கும், காக்காமண்டையனுக்கும் பிரச்சனைகள் முற்ற, பசுபதிபாண்டியனிடம் பணத்தை வாங்கிக் கொண்டு காக்காமண்டையனின் தம்பி மரியான்ஸ் நாடாரைக் காட்டிக் கொடுக்க கொல்லப்பட்டான் மரியான்ஸ் நாடார். அதுவே காக்காமண்டையனுக்கும், பட்டுராஜூவுக்கும் நிரந்தரப் பகையாக மாறியது.


 


    இதனை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட உளவுத்துறையினர் இருதரப்பினரிடையே கருத்துவேறுபாடுகளை அதிகரிக்கும் வகையில் பட்டுராஜை காக்காமண்டையன் செல்வராஜூவுக்கு எதிராக தூண்டி விட, எந்த வழக்கில் பட்டுராஜ் சிக்கினாலும் உன்னை காக்காமண்டையன் தான் சிக்க வைத்தார் என்று கூறியதோடு பகையை அதிகரிக்கவும் செய்தனர். ஒருக்கட்டத்தில் தூத்துக்குடியில் வாழமுடியாத நிலை பட்டுராஜூவுக்கு. பொறுத்தப் பார்த்த பட்டுராஜ் கடந்த 1999ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி காமராஜர் பிறந்த நாளான்று தூத்துக்குடி கிருஷ்ண ராஜபுரத்தில் நடந்த விழாமேடையில் வைத்து வெடிகுண்டுகளை வீசி காக்காமண்டையனை கொலை செய்தனர். மரியான்ஸ் நாடாரின் மகன் ஹெர்குலிஸூம், காக்கா மண்டையனின் மகன்கள் சுகந்தன், வசந்தன் ஆகியோரும் இணைந்து பட்டுராஜை தீர்த்துக்கட்ட காத்திருந்த நேரத்தில் ஜூன் 2016 அன்று பட்டுராஜை சாயல்குடி கன்னிராஜபுரத்தில் வெடிகுண்டு வீசி கொலை செய்தது தற்பொழுது கொலையுண்ட சிந்தா எனும் சரவணன். பட்டுராஜ் தரப்போ காத்திருந்து தற்பொழுது சிந்தா எனும் சரவணனை வேட்டையாடி குதறிப் போட்டுள்ளது. இத்தனை கொலைகளுக்கும் காரணம் போலீசே..!" என்கின்றனர் தூத்துக்குடி மாநகர ரவுடிகள். காவல்துறை தான் பதிலளிக்க வேண்டும்..!


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.