Skip to main content

காத்திருந்து முடித்த பகை.!! கொலையாளிகளுக்கு கை கொடுத்ததா போலீஸ்..?

Published on 28/08/2019 | Edited on 28/08/2019


 

ஆயுதம் தூக்கியவன் ஆயுதத்தாலயே அழிவான் என்பது வழக்கு சொல். அதை மெய்ப்பிக்கும் வகையில் பழிக்குப்பழியாக அதே ஆயுதத்தாலேயே அழிக்கப்பட்டுள்ளான் பல கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவனும் தூத்துக்குடியில் பிரபல தாதாவாக வலம் வந்தவனுமான சிந்தா எனும் சரவணன். இதற்கு பின்னணியில் காவல்துறை இருக்கலாம் என்பது தான் சர்ச்சைக்குரியதாகியுள்ளது.

 

saravanan nellai



தூத்துக்குடி மாதா நகரை சேர்ந்த சிந்தா எனும் சரவணனுக்கு அவ்வவ்ப்போது மீன்பிடித் தொழிலும், தினசரி கட்டப்பஞ்சாயத்தும் செய்து வருவது தான் வழக்கமான ஒன்று. முதல் மனைவி பிரியாவை விட்டு பிரிந்து, இரண்டாம் மனைவி கார்த்திகாவுடன் குடும்பம் நடந்தி வந்துள்ளான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறைத்தண்டனையிலிருந்து வெளிவந்து, தனது பாதுக்காப்பு கருதி கேவிகே நகரில் குடிபெயர்ந்துள்ளான். இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் 5 பேர் கொண்ட மர்மக்கும்பல் இவனை வீட்டியேலேயே வைத்து வெட்டித் துண்டாக்கி கொன்று போட்டது. சம்பவ இடத்தினைப் பார்வையிட்ட மாவட்ட எஸ்.பி. அருண்பால கோபாலன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 



 

இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி பரப்பரப்பை உண்டாக்கியது. கொலையுண்ட சிந்தா எனும் சரவணன் மீது 2009ம் ஆண்டு முன்னாள் பாமக பிரமுகர் காசிப்பாண்டியனைக் கொலை செய்த வழக்கு, 2016ம் ஆண்டு சாயல்குடியில் பட்டுராஜனை கொலை செய்த வழக்கு, ஆறுமுகநேரியில் ஒரு கொலை வழக்கு, நாகர்கோவிலில் ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட  11 வழக்குகள் உள்ளன. இதில் சாயல்குடியில் கொல்லப்பட்ட பட்டுராஜன் தரப்பே இதனை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர் போலீசார்.
 

 
இது இப்படியிருக்க, " தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தை சேர்ந்த சுப்பிரமணிய நாடாரின் மகனான பட்டுராஜ் ஆரம்பத்தில் பந்தல் தொழில் செய்யும் வேலையை செய்து வந்திருக்கிறான். 80களின் இறுதிகளில் அந்தப் பகுதியில் திண்டுக்கல்லில் கொலையுண்ட பசுபதி பாண்டியனுக்கும், அங்கு காமராஜர் மக்கள் கழகம் என்ற அமைப்பினை நடத்தி வந்த காக்கா மண்டையன் செல்வராஜ் நாடாருக்கும் மோதல்கள் வெடித்துக் கொள்ளும். அது சாதி மோதலாக மாற்றப்பட்ட நேரத்தில் பட்டுராஜ் காக்காமண்டையனுடன் சேர்ந்து பசுபதிப் பாண்டியனை எதிர்த்து வந்தான். அலங்காரத்தட்டில் வீட்டைக் காலி செய்யும் பஞ்சாயத்தில் பங்கு பிரிப்பதில் காக்கா மண்டையனுக்கும், பட்டுராஜூவுக்கும் மோதல் ஏற்பட பாளையங்கோட்டையை சேர்ந்த கராத்தே செல்வின் நாடாரின் இயக்கத்தில் சேர ஆரம்பித்து, அவரை முன்னிறுத்தி தூத்துக்குடியில் மாநாடே போட்டான். அதே காலக்கட்டத்தினில் பசுபதி பாண்டியனுக்கும், காக்காமண்டையனுக்கும் பிரச்சனைகள் முற்ற, பசுபதிபாண்டியனிடம் பணத்தை வாங்கிக் கொண்டு காக்காமண்டையனின் தம்பி மரியான்ஸ் நாடாரைக் காட்டிக் கொடுக்க கொல்லப்பட்டான் மரியான்ஸ் நாடார். அதுவே காக்காமண்டையனுக்கும், பட்டுராஜூவுக்கும் நிரந்தரப் பகையாக மாறியது.


 


    இதனை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட உளவுத்துறையினர் இருதரப்பினரிடையே கருத்துவேறுபாடுகளை அதிகரிக்கும் வகையில் பட்டுராஜை காக்காமண்டையன் செல்வராஜூவுக்கு எதிராக தூண்டி விட, எந்த வழக்கில் பட்டுராஜ் சிக்கினாலும் உன்னை காக்காமண்டையன் தான் சிக்க வைத்தார் என்று கூறியதோடு பகையை அதிகரிக்கவும் செய்தனர். ஒருக்கட்டத்தில் தூத்துக்குடியில் வாழமுடியாத நிலை பட்டுராஜூவுக்கு. பொறுத்தப் பார்த்த பட்டுராஜ் கடந்த 1999ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி காமராஜர் பிறந்த நாளான்று தூத்துக்குடி கிருஷ்ண ராஜபுரத்தில் நடந்த விழாமேடையில் வைத்து வெடிகுண்டுகளை வீசி காக்காமண்டையனை கொலை செய்தனர். மரியான்ஸ் நாடாரின் மகன் ஹெர்குலிஸூம், காக்கா மண்டையனின் மகன்கள் சுகந்தன், வசந்தன் ஆகியோரும் இணைந்து பட்டுராஜை தீர்த்துக்கட்ட காத்திருந்த நேரத்தில் ஜூன் 2016 அன்று பட்டுராஜை சாயல்குடி கன்னிராஜபுரத்தில் வெடிகுண்டு வீசி கொலை செய்தது தற்பொழுது கொலையுண்ட சிந்தா எனும் சரவணன். பட்டுராஜ் தரப்போ காத்திருந்து தற்பொழுது சிந்தா எனும் சரவணனை வேட்டையாடி குதறிப் போட்டுள்ளது. இத்தனை கொலைகளுக்கும் காரணம் போலீசே..!" என்கின்றனர் தூத்துக்குடி மாநகர ரவுடிகள். காவல்துறை தான் பதிலளிக்க வேண்டும்..!


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.