வட்டாட்சியரும், துனை கண்காணிப்பாளரும் இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 14க்கு முரனாக நடந்து கொண்டனர் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது..
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டத்திற்கு உட்பட்டது மாங்கொட்டாபுரம் கிராமம். இந்த கிராமத்தில் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் சொந்தமான முத்துமாலை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலானது இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வருகிறது ஒரு கால பூஜைக்காக அறநிலைய துறையால் ஒரு பூசாரியும் நியமிக்கபட்டு உள்ளார். இந்த கோயிலில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த கொடை விழாவின் போது நன்கொடையாளர் பெயர் கல்வெட்டில் பொறிப்பது சம்பந்தமாக இரு பிரிவினருக்கு இடையே அடிதடி மோதல் ஏற்பட்டு ஏரல் காவல் நிலையத்தால் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.சகாய ஜோஸ் பாதிக்கப்பட்ட தரப்பினரை மிரட்டி ஊரை விட்டு வெளியேற்றியது தொடர்பாகவும் இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959 பிரிவு 45,46,47 ன் படி இந்து கோயிலில் முடிவு எடுக்க வேண்டியது இணை ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதை தெரிந்து கொண்டு கோயிலின் சாவியை தனிநபருக்கு வாங்கி கொடுத்து அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியதால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் ஏரல் வட்டாட்சியர் மலர்தேவன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி சகாய ஜோஸ் ஆகியோர் மீது இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 14 க்கு முரணாக நடந்து கொண்டார்கள் என மாநில மனித உரிமைகள் ஆணையம் மற்றும் காவல்துறை தலைவர், உள்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் வருவாய் துறை முதன்மை செயலாளர் ஆகியோருக்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் விரிவான புகார் மனு அளிக்கப்பட்டதால் பரப்பரப்பு நிலவி வருகின்றது.