ஸ்டெர்லைட் ஆலையை மூடியது செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு இன்று (31/08/2020) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை மூடல் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், வேதாந்தா மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசு உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் பதில் தரஉத்தரவிட்ட நீதிபதிகள்வழக்கை ஒத்திவைத்தனர்.
ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசு மற்றும் ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.