Skip to main content

ஆட்சியர் தான் மனு வாங்கனுமா..? போட்டிக்கு பி.ஆர்.ஓ.அலுவலகத்தில் மனுக்கள் வாங்கிய எம்.எல்.ஏ....!!!

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

மாவட்டத்திலுள்ள மக்களின் குறைகளை, இடர்பாடுகளை களைவதற்காக வாரக்கிழமைகளில் திங்கள் தோறும் குறை தீர்க்கும் நாளை நடத்தி வருகின்றது மாவட்ட நிர்வாகம். மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அதிகாரிகளும் குழுமியிருக்க ஆட்சியரிடம் மனுவினைப் பெற்று அதற்கு தீர்வு அளித்து வருவது தான் வாடிக்கையான ஒன்று. மாறாக அரசியல் கட்சிகளை சேர்ந்த எந்தவொரு எம்.எல்.ஏ., எம்.பி.க்களும் அங்கு தனியாக மனுவினை வாங்கக் கூடாது என்பது பொதுவான விதி.. இதற்கு மாறாக, " ஏன் அவர்கிட்ட மனுக் கொடுக்கனுமா என்ன..?" என ஆட்சியருக்குப் போட்டியாக, ஆட்சியர் அலுவலகத்திலுள்ள பி.ஆர்.ஓ.அலுவலகத்தில் இருந்து கொண்டு, பொதுமக்களிடம் மனுவாங்கியுள்ளார் ஆளுங்கட்சியினை சேர்ந்த எம்.எல்.ஏ.ஒருவர்.

THOOTHUKUDI DISTRICT PEOPLES GRIEVANCE HAVE IN ADMK MLA

 

நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தல் மூலம் அதிமுக சார்பில் விளாத்திக்குளத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானவர் சின்னப்பன். இவர் திங்கள் குறைதீர்க்கும் நாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சரியாக 11 மணிக்கு வந்தவர், நேராக மாவட்ட செய்தித்தொடர்பு அலுவலரின் அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள பி.ஆர்.ஓ.வின் இருக்கையில் அமர்ந்துக் கொண்டார். பி.ஆர்.ஓ.சீனிவாசனும் அருகினில் அமர்ந்து கொள்ள விளாத்திக்குளம் தொகுதியிலிருந்து வந்த மக்களிடமிருந்து மனுக்கள் வாங்க தொடங்கினர். அருகிலிருந்த பி.ஆர்.ஓ-வும் எம்.எல்.ஏ.சின்னப்பன் மனுவாங்குவதை ஆட்சேபிக்கமால், அவரும் சேர்ந்து மனுக்களைப் பெற்றுக்கொள்ள தொடங்கினார். அதன்பின் கட்சி நிர்வாகிகளை வரவழைத்து அதே அலுவலகத்தில் ஆலோசனை நடத்திவிட்டு வெளியேறினார் எம்.எல்.ஏ.சின்னப்பன். இவ்விவகாரம் வெளியில் கசிய கடுங்கோபத்தில் இருந்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தித்துறை தொடர்பு இயக்குநரை அழைத்து கண்டனங்களை பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழியர்களோ., " பொதுவாக திங்கள் குறைதீர்க்கும் நாளில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை ஆட்சியரே வாங்குவார். அவர் இல்லையெனில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் வாங்குவார். அவரும் இல்லையெனில் ஆட்சியரின் நேர்முக உதவியாளரோ அல்லது சமூகப்பாதுக்காப்பு திட்டத்தின் தனித்துணை ஆட்சியர் வாங்குவது வழமையான ஒன்று. மாறாக இங்கு எந்த அரசியல்வாதிகளும் மனுக்களைப் பெறுவதும் இல்லை. நாங்கள் அனுமதிப்பதும் இல்லை. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வானவர் தன்னுடையத் தொகுதியில் தான் மனுக்களைப் பெற வேண்டும்,. இங்கு வந்து மனுக்களைப் பெற்றது கண்டிக்கத்தக்கது. அதைவிட வேதனை பி.ஆர்.ஓ.அலுவலகத்தில் அவருடைய இருக்கையை வழங்கியது. இதனைக் கண்டித்து விரைவில் போராட்டத்தை அறிவிக்கவுள்ளோம்." என்கின்றனர் அவர்கள். இது தெரிந்த எதிர்க்கட்சிகளும் இதனை சரிசெய்யாவிடில் நாங்களும் அங்கு வந்து மனுக்கள் வாங்குவோம்." என தெரிவிக்கவும் விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.