Skip to main content

‘தமிழகத்தில் காவல்நிலைய சித்திரவதை மரணங்கள்! நீதி விசாரணை நடத்துவாரா முதல்வர்?’- பொன்ராஜ் ஆதங்கம்!

Published on 27/06/2020 | Edited on 27/06/2020

 

thoothukudi district incident police ponraj

 

சாத்தான்குளம் லாக்கப் இரட்டை கொலையில் காவலர்கள், 'Friends of Police', அதிமுக்கிய துறையில் உள்ளவர், கோவில்பட்டி கிளைச் சிறைச்சாலை அதிகாரிகள், கோவில்பட்டி அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளதாக, அப்துல் கலாம் லட்சிய இந்தியா இயக்கத்தின் தலைமை வழிகாட்டி, வெ.பொன்ராஜ் கூறியிருக்கிறார்.   

 

‘தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இரு அப்பாவிகளை, ஈவு இரக்கமின்றி, வன்முறைத் தாக்குதல் நடத்திக் கோரமாக அடித்துத் துன்புறுத்தி, மன உளைச்சலுக்கு ஆளாக்கி, செய்யாத தவறுக்கு பலியாக்கிவிட்டனர்.  

 

குற்றம்சாட்டப்பட்ட நபருக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து ஜனநாயக வழிமுறைகளையும் படுகுழியில் தள்ளி, ஜனநாயக நடைமுறையைக் காலில் போட்டு மிதித்து, கடமையில் இருந்து தவறியிருக்கிறார்கள் அல்லது குற்றமிழைத்திருக்கிறார்கள்.

 

தொடர்ந்து இதே தவறு செய்யும் இரண்டு காவலர்களின் கை காட்டுதலுக்கு அடிமைப்பட்டு, ஜனநாயகப் படுகொலை செய்திருக்கிறார்கள் என்ற சந்தேகம் வலுத்திருக்கிறது. இவர்கள் அனைவர் மீதும், கொலை வழக்குப் பதிவு செய்து, சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடப்பதற்கு, முதல்வர் உத்தரவிடவேண்டும்.

 

அதே நேரத்தில், நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கையும், தமிழகம் முழுவதும் இதுபோல் நடந்த எண்ணற்ற கொடும் செயல்களையும், அப்பாவிகள் மீது காவல் துறையால் சித்திரவதைக்கு உள்ளாக்கி மரணமடைந்த வழக்குகளையும் எடுத்து, இனிமேல் அப்பாவி பொதுமக்களுக்கு இப்படி நடக்காத நிலையை, சட்டத்தை மாற்றும் நிலையை எற்படுத்தும் வகையில் நீதிவிசாரணை நடத்தி, அது தரும் பரிந்துரையை, இந்த ஆட்சி முடிவதற்குள் செயல்படுத்துவேன் எற்று உறுதி கூற முடியுமா? தாமதம் செய்யாதீர்கள்! விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு! என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோளாக விடுத்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.