Skip to main content

காவல்துறை என்கவுன்ட்டரில் தொடர் குற்றவாளி சுட்டுக்கொலை!

Published on 15/10/2021 | Edited on 15/10/2021

 

காவல்துறையினரின் என்கவுன்ட்டரில் தொடர் குற்றவாளி துரைமுருகன் சுட்டுக் கொல்லப்பட்டார். 

 

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டைப் பக்கம் உள்ள கூட்டாம்புளியைச் சேர்ந்தவர் துரைமுருகன். ஆரம்பத்தில் களவுகளில் ஈடுபட்டவர் பின் ரவுடியாக வளர்ந்திருக்கிறார். அவ்வப்போது ஆட்களைச் சேர்த்துக் கொள்வார். கேங்காக செயல்பட்டதுமில்லை. 2001- ன் போதே தொழிலில் ஈடுபட்டவர். தனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், கேட்டது கிடைக்காவிட்டால் என்றாலும் திடீரென அரிவாளைத் தூக்குவார் என்கிறார்கள்.

 

தூத்துக்குடியின் ராஜீவ் நகர்ப் பகுதிகளிலும் இவரது நடமாட்டம் உண்டு. களவு வழிப்பறி கொள்ளை, கொலை உள்ளிட்ட 20 வழக்குகள் இவர் மீது உள்ளன. இவைகளில் தூத்துக்குடியின் தென்பாகம் காவல் நிலையத்தில் மூன்று கொலை வழக்குகள் உள்ளிட்ட துரைமுருகன் மீதான 8 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த அக்டோபர்12- ஆம் தேதி அன்று நெல்லையின் டக்கரம்மாள்புரத்தில் தகவலின் பேரில் கொன்று புதைக்கப்பட்ட வாலிபர் ஒருவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. விசாரணையில், தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் சிவகாமிபுரத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் என்று தெரிய வந்திருக்கிறது. அவரைக் கடத்திக் கொலை செய்து புதைக்கப்பட்ட வழக்கில் துரைமுருகனும் குற்றவாளிகளில் மெயின் குற்றவாளியாம்.

 

அந்தக் கொலைச் சம்பவத்தில் ரவுடி துரைமுருகனை எஸ்.ஐ. ராஜபிரபு தலைமையிலான தனிப்படை தேடி வந்திருக்கின்றனர். தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் எல்லைக்குட்பட்ட முள்ளக்காடு பகுதியில் துரைமுருகன் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைக்க எஸ்.ஐ. ராஜபிரபு உள்ளிட்ட தனிப்படை காவல்துறையினர் துரைமுருகனைச் சுற்றி வளைத்திருக்கின்றனர். அது சமயம், காவல்துறையினரைத் தாக்கிவிட்டு ரவுடி துரைமுருகன் தப்பி ஓடுகையில், காவல்துறையினர் சுடப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கிறான். 

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமார் மற்றும் டி.எஸ்.பி. கணேஷ் உள்ளிட்ட காவல்துறையினர் பார்வையிட்டனர். எஸ்.பி. ஜெயக்குமார் விசாரணையும் நடத்தியிருக்கிறார். கைப்பற்ற துரைமுருகனின் உடல் உடற்கூறு ஆய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரவுடி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தை பரபரப்பாக்கியிருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.