Skip to main content

இந்து முன்னணிப் பிரமுகரை மிரட்டிய செட்டப்குண்டு... கதிகலங்கிய காவல்துறை!!

Published on 04/09/2020 | Edited on 04/09/2020

 

thoothukudi district hindu munnani leader home police

 

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பக்கமாக இருக்கும் பன்னம் பாறை கிராமத்தை சேர்ந்தவர் துரை. பால் வியாபாரம் செய்து வரும் துரை சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணியின் செயற்குழு உறுப்பினரும் கூட. தினந்தோறும் அதிகாலை பால் வியாபாரத்திற்கு செல்வது துரையின் வழக்கம்.

 

அக்கம் பக்க கிராமங்கள் இவருக்கான வியாபார ஸ்பாட். வழக்கம் போல் நேற்று முன்தினம் (02/09/2020) அதிகாலை 05.00 மணியளவில் துரை பால் வியாபாரத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தார். வெளியே செல்ல வந்தவர் தன் வீட்டின் முன்னே ஒரு மர்மப் பொருள் வீசப்பட்டுக் கிடந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியானவர்,  அதை பார்த்த போது உருண்டையான அதில் நூல் சுற்றப்பட்டு மேல் புறம் திரி நீண்டு கொண்டிருப்பதைப் பார்த்தவருக்கு கூடுதல் பீதி. வெடி குண்டாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் உடனடியாக சாத்தான்குளம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்திருக்கிறார். அதே சமயம் தகவலறிந்து இந்து முன்னணிப் பிரமுகர்கள் சிலரும் ஸ்பாட்டில் கூடி விட்டனர்.

 

 

thoothukudi district hindu munnani leader home police

 

 

சாத்தான்குளம் டி.எஸ்.பி. கிளாட்வின் ஜெகதீஸ்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் பெர்னார்ட் சேவியர் தலைமையிலான போலீசார் ஸ்பாட்டுக்கு வர, தகவல் தெரிவிக்கப்பட்ட நொடியில் மாவட்ட எஸ்.பி.யான ஜெயகுமாரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டிருக்கிறார். வெடிகுண்டு தடுப்பு ஸ்குவாட் வரவழைக்கப்பட்டு அந்த மர்மப் பொருளை காவல் நிலையம் குடியிருப்பின் பின் பகுதிக்குப் பாதுகாப்பாகக் கொண்டு சென்ற வெடிகுண்டு சோதனை தடுப்பு குழு சோதனை நடத்தினர். சோதனையின் போது அது வெடிகுண்டு இல்லை காய்ந்து போன தேங்காயைக் கொண்டு நூல் சுற்றி குண்டு போன்று செட்டப் செய்தது தெரிய வந்திருக்கிறது.

 

அது வெடிகுண்டல்ல. சாதாரண தேங்காய்.குண்டு போல் செட்டப் செய்து துரையை அச்சுறுத்தும் வகையில் போட்டிருக்கலாம். விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார் எஸ்.பி. ஜெயக்குமார்.

 

thoothukudi district hindu munnani leader home police

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் ஒரு வழிபாட்டுத் தலம் அமைக்கும் விவகாரத்தில் அதனைக் கிராமமே எதிர்த்தது. அது சமயம் முன்னின்றவர் இந்து முன்னணிப் பிரமுகரான துரை. இதன் காரணமாக அச்சுறுத்தல் பொருட்டு துரை வீட்டு முன்பு வீசப்பட்டதா என்றும் விசாரணை போவதாகவும் தெரிகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.