Skip to main content

மதுபோதையால் தந்தை, மகன் வெட்டிக்கொலை... தப்பியோடிய இளைஞருக்கு வலைவீச்சு!

Published on 18/05/2020 | Edited on 19/05/2020

 

thoothukudi district father and son incident


மிகுந்த மதுபோதையில் தனது மகனை அரிவாளால் வெட்டி காயப்படுத்தியவனிடம், நியாயம் கேட்கச் சென்ற தந்தையும், மகனும் அதே இளைஞரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி காவல்துறை துணைச் சரகத்திற்குட்பட்ட பசுவந்தனை காவல் நிலையத்திற்குட்பட்டது தெற்கு பொம்மையாபுர கிராமம். இக்கிராமத்தினைச் சேர்ந்த கருப்பசாமியின் மூத்தமகனும், விவசாயக் கூலித் தொழிலாளியுமான காளிச்சாமி நேற்றிரவு மதுபோதையில் தள்ளாட்டமாக ஊருக்குள் வந்த நிலையில், அங்கேயிருந்த பிள்ளையார் கோவில் அருகே ஏற்கனவே மதுபோதையின் உச்சத்திலிருந்த பாலமுருகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 
 

 

thoothukudi district father and son incident


இருவருக்குமிடையேயான வாக்குவாதம் முற்றி கைக்கலப்பான சூழலில் தான் வைத்திருந்த அரிவாளால் காளிச்சாமியைத் தாக்கி வெட்டினார். இச்சூழலில் அருகிலிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி விலக்கி விடவே, சிகிச்சைக்காக காளிச்சாமி பசுவந்தனை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், "எதற்காக தனது மகன் தாக்கப்பட்டான்.?" என பாலமுருகனிடம் நியாயம் கேட்க காளிச்சாமியின் தந்தையும், தம்பியுமான மகாராஜன் அவனது வீட்டிற்குச் சென்றிருக்கின்றனர். இதனால் கடுங்கோபமடைந்த பாலமுருகன் இருவரையும் வெட்டி வீசியுள்ளான். சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்த சூழலில் பாலமுருகன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணியாச்சி டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் மற்றும் பசுவந்தனை காவல் நிலைய போலீசார் இருவரின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தப்பியோடிய பாலமுருகனை தேடி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.