ADVERTISEMENT

குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா அக்.17- ஆம் தேதி தொடங்குகிறது!

01:21 PM Oct 08, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

குலசேகரப்பட்டினத்தில் புகழ் பெற்ற தசரா திருவிழா அக்டோபர் 17- ஆம் தேதி தொடங்கும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

திருவிழா தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் புகழ் பெற்ற தசரா திருவிழா வரும் அக்டோபர் 17- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றம், அக்டோபர் 26- ஆம் தேதி நடக்கும் சூரசம்ஹாரம், கொடி இறக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

தினமும் உள்ளூர், வெளி மாவட்டங்களை சேர்ந்த 8 ஆயிரம் பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்யலாம். குலசேகரப்பட்டினத்தில் பக்தர்கள், தங்குவதற்கும், கோயில் வளாகத்தில் கடைகள் அமைப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது. சாமி தரிசனத்துக்கான அனுமதி சீட்டு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT