குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா அக்.17- ஆம் தேதி தொடங்குகிறது!

thoothukudi disrict, kulasekarapattinam festival oct 17th

குலசேகரப்பட்டினத்தில் புகழ் பெற்ற தசரா திருவிழா அக்டோபர் 17- ஆம் தேதி தொடங்கும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

திருவிழா தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் புகழ் பெற்ற தசரா திருவிழா வரும் அக்டோபர் 17- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றம், அக்டோபர் 26- ஆம் தேதி நடக்கும் சூரசம்ஹாரம், கொடி இறக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

தினமும் உள்ளூர், வெளி மாவட்டங்களை சேர்ந்த 8 ஆயிரம் பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்யலாம். குலசேகரப்பட்டினத்தில் பக்தர்கள், தங்குவதற்கும், கோயில் வளாகத்தில் கடைகள் அமைப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது. சாமி தரிசனத்துக்கான அனுமதி சீட்டு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

Festivals kulasekarapattinam Thoothukudi district
இதையும் படியுங்கள்
Subscribe