தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதில் 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் பதப்படுத்தி வைக்கப்பட்ட 6 பேரின் உடல்களை இன்று உடற்கூறு ஆய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் ஜிம்மர் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 3 மருத்துவர்கள் இன்று காலை உடற்கூறு ஆய்வு செய்தனர். அந்த உடற்கூறு ஆய்வு 4 ஜீடிசியல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடத்தப்பட்டது. அனைத்து செயல்பாடுகளும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
6 பேரின் உடல்களும் உடற்கூறு செய்த பின்னர் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் இன்றைய தினம், லூர்து அம்மாள் புரத்தைச் சேர்ந்த கிளாட்சன், தாமோதர் நகரைச் சேர்ந்த மணிராஜ், புஷ்பா நகரைச் சேர்ந்த ரஞ்சித் குமார், திரேஷ்புரத்தைச் சேர்ந்த ஜான்சி ஆகியோரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த ஒவ்வொருவரின் உடல்கள் செல்லும்போது ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ், டி.ஐ.ஜி. கபில்குமார், எஸ்.பி. முரளி ரம்பா ஆகியோரின் மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. நகரின் விவிடி சிக்னல், மில்லர்புரம் மையவாடி, திரேஷ்புரம், அண்ணாநகர் போன்ற பகுதிகளில் போலீஸ் செக்போஸ்ட் அமைத்து பாதுகாப்பு தரப்பட்டது. இந்த பாதுகாப்புடன் இந்த நான்கு பேரின் உடல்கள் அந்தந்த ஏரியாக்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து உசிலம்பட்டி ஜெயராமனின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் உசிலம்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இன்றைய தினம் 5 உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. 6வது உடலான தாளமுத்து நகரின் அந்தோணி செல்வராஜ் உடலை உடற்கூறு ஆய்வு செய்தனர். அவரது உடலை பெறுவதற்கு உறவினர்கள் வெளிநாட்டில் இருப்பதால் நாளை பெற்றுக்கொள்வதாக அங்குள்ள உறவினர்கள் தகவல் கொடுத்ததன் நாளை அவரது உடல் ஒப்படைக்கப்பட உள்ளது. இத்துடன் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் தொடருகிறது.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
உடற்கூறு ஆய்வு நடக்கும்போதும், உடல்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும்போதும் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருப்பதற்காக மருத்துவமனை வளாகத்தை சுற்றி ஆளில்லா ட்ரோல் கேமரா விமானத்தை அனுப்பி போலீசார் கண்காணித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-06/thoothukudi_001.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-06/thoothukudi_002.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-06/thoothukudi_003.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-06/thoothukudi_005.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-06/thoothukudi_004.jpg)