Skip to main content

கடற்கரைப் பகுதியில் ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள்!

Published on 15/07/2019 | Edited on 15/07/2019

தொண்டி கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக வெடிப்பொருட்கள் மரைன் போலீசாரிடம் பெருமளவில் சிக்க, எப்படி இங்கு வந்தது? எனும் ஆய்வில் மாவட்டப் போலீசார் கூடுதல் விசாரணையை தொடங்கியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கிழக்குக் கடற்கரையோர சாலையிலுள்ள கடற்கரை ஊரான தொண்டி. மீன்பிடித் தொழிலை மட்டுமே பிரதானமாக உள்ள இந்த ஊரில், இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைக்கும் வண்ணம் சில சமூக விரோத செயல்களும் நடக்கும்.

 

 

 

thondi  Gelatin sticks, tetanators on the beach

 

 

 

இது இப்படியிருக்க, ஞாயிறன்று தொண்டி பகுதியிலுள்ள மரைன் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, சந்தேகத்திற்கிடமாக கையில் பையுடன் சுற்றித்திரிந்த நபர் ஒருவரை பிடிக்க, அவரது கைப்பையில் "தடைசெய்யப்பட்ட 65 ஜெலட்டின் குச்சிகள், 44 டெட்டனேட்டர்கள் மற்றும் நான்கு மீட்டர் வயர் "உள்ளிட்டவைகள் இருக்க பொருட்களை கைப்பற்றியும், அந்த நபரையும் அழைத்து மரைன் போலீஸ் அலுவகத்திற்கு கொண்டு சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில், அவரது பெயர் வீரபத்திரன் எனவும், ஊர் புதுக்குடி பகுதி எனவும், மீன் பிடிப்பதற்காக இதனை வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தொண்டி கடற்கரை பகுதியில் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்து இருப்பது. இப்பகுதி மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.