Skip to main content

கடற்கரைப் பகுதியில் ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள்!

Published on 15/07/2019 | Edited on 15/07/2019

தொண்டி கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக வெடிப்பொருட்கள் மரைன் போலீசாரிடம் பெருமளவில் சிக்க, எப்படி இங்கு வந்தது? எனும் ஆய்வில் மாவட்டப் போலீசார் கூடுதல் விசாரணையை தொடங்கியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கிழக்குக் கடற்கரையோர சாலையிலுள்ள கடற்கரை ஊரான தொண்டி. மீன்பிடித் தொழிலை மட்டுமே பிரதானமாக உள்ள இந்த ஊரில், இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைக்கும் வண்ணம் சில சமூக விரோத செயல்களும் நடக்கும்.

 

 

 

thondi  Gelatin sticks, tetanators on the beach

 

 

 

இது இப்படியிருக்க, ஞாயிறன்று தொண்டி பகுதியிலுள்ள மரைன் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, சந்தேகத்திற்கிடமாக கையில் பையுடன் சுற்றித்திரிந்த நபர் ஒருவரை பிடிக்க, அவரது கைப்பையில் "தடைசெய்யப்பட்ட 65 ஜெலட்டின் குச்சிகள், 44 டெட்டனேட்டர்கள் மற்றும் நான்கு மீட்டர் வயர் "உள்ளிட்டவைகள் இருக்க பொருட்களை கைப்பற்றியும், அந்த நபரையும் அழைத்து மரைன் போலீஸ் அலுவகத்திற்கு கொண்டு சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில், அவரது பெயர் வீரபத்திரன் எனவும், ஊர் புதுக்குடி பகுதி எனவும், மீன் பிடிப்பதற்காக இதனை வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தொண்டி கடற்கரை பகுதியில் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்து இருப்பது. இப்பகுதி மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.