Skip to main content

ஆத்தாடி இந்த வெள்ளை கார பொண்ணுக்கு நம்ப ஊரு...

Published on 26/05/2019 | Edited on 26/05/2019

 

அமெரிக்காவில் உள்ள கரோலினா மாகாணம் சான் போடு நகரை சேர்ந்தவர் 22 வயது பிரட்டி. இவர் நமது தமிழர்களின் பண்பாடு கலை காலாச்சாரம் போன்றவைகள் பற்றி ஆய்வு செய்வதற்க்காக ஆர்வமாக சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்து தங்கினார். அதோடு ஆய்வுக்குரிய தகவல்களை திரட்டுவதற்காக இணையதளத்தில் ஒரு முகநூல் துவங்கி அதன் மூலம் தகவல் அளித்து உதவுமாறு பதிவிட்ருந்தார்.


 

Tittagudi



இதை படித்து பார்த்த பலர் பிரட்டிக்கு உதவி செய்தனர். அதில் ஒருவர் பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூரை சேர்ந்த சூர்ய பிரகாஷ். பி.இ. பட்டதாரியான இவர் முகநூல் மூலம் பிரட்டிக்கு அறிமுகமானதோடு அவருக்கு தேவையான தகவல்களை அவ்வப்போது அனுப்பி உதவி செய்து வந்தார். தமிழர் பண்பாடு தமிழர் நாகரீகம் விழாக்கள் திருமண விழாக்கள் கோவில் விழாக்கள் என பல தகவல்களையும் அதற்கான புகைப்படங்கள் வீடியோக்கள் என தொடர்ந்து அனுப்பி உதவி செய்து வந்தார்.

 

 

இதை பார்த்த பிரட்டிக்கு சூர்யகுமார் மீது மதிப்பு மிகுந்தது. தனது செல்போன் மூலம் சூர்யகுமாரிடம் பிரட்டி ஆய்வுகள் பற்றி விரிவாக அடிக்கடி பேசி வந்தார். இதன் மூலம் இருவரும் நல்ல நண்பர்களாக பழகினார்கள். இந்த நட்பு நீடிக்கவே அது காதலாக மாரியது. இருவரும் அவரவர் பெற்றோர்களிடம் பேசி திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன் படி பிரட்டி - சூர்யகுமார் இருவருக்கும் கடந்த 24ம் தேதி திட்டக்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்த விழா மிகசிறப்பாக நடைபெற்றது. 


 

 

அப்போது மணமகள் பிரட்டி, சூர்யகுமாரின் உதவி செய்யும் மனப்பான்மை ரொம்ப பிடித்துள்ளது. மேலும் தமிழ் மக்களின் உணவு, உடை, உபசரிப்பு அவர்கள் காட்டும் அன்பு பாசம் மனித நேயம் கடவுள் மீதுள்ள பக்தி அவர்கள் நடத்தும் விழாக்கள் வீரவிளையாட்டுக்கள் என பல அம்சங்களும் என்னை கவர்ந்து விட்டன எனவே தமிழ் பெண்ணாக வாழ வேண்டும் என விரும்பினேன். சூர்யகுமாரும் இதற்கு மனமகிழ்வோடு சம்மதம் தெரிவித்தார். இது விஷயமாக அமெரிக்காவில் உள்ள எனது பெற்றோரிடம் பேசி முழு சம்மதம் பெற்றேன். அதன்படி இப்போது நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. இந்த விழாவிற்க்கு பணிகள் காரணமாக அவர்களால் வர இயலவில்லை. வாழ்த்து செய்திகள் அனுப்பியுள்ளனர். அடுத்த ஆண்டு அமெரிக்காவில் எங்கள் ஊரில் மிக சிறப்பான முறையில் எங்கள் திருணம் எங்கள் பெற்றோர்கள் முன்னிலையில் தமிழ் மரபுப்படி நடைபெற உள்ளது என்று சந்தோஷமாக கூறி அசத்துகிறார் பிரட்டி.


 

Tittagudi



அகரம் சீகூர் ஒரு சின்ன கிராமம் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த கிராமத்து பெண்கள், மூதாட்டிகள் என பலரும், ''ஆத்தாடி இந்த வெள்ளை கார பொண்ணுக்கு நம்ப ஊரு மாப்பிள்ளைய பிடிச்சி போன அதிசயத்த பார்த்தியா'' என்று கன்னத்தில் கை வைத்து கொண்டு வியப்பாக பார்த்து பேசி கொண்டனர். கிராமத்தில் அடியெடுத்து வைத்து வாழப்போகும் அமெரிக்க பெண் வாழ்க வளமுடன் 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.