Advertisment

நீடாமங்கலத்தில் இந்திய கம்யூ பிரமுகர் கொலை; திட்டக்குடியில் ஆர்ப்பாட்டம்! 

Thitakudi CPI Members struggle

Advertisment

திருவாரூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் தமிழார்வன், நீடாமங்கலம் கடைத்தெருவில் மிகக் கொடூரமாகப்படுகொலை செய்யப்பட்டார்.

இவர் படுகொலைக்கு முறையான நடவடிக்கை வேண்டும் என பல்வேறு இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், கடலூர் மாவட்டம், திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே அம்மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழார்வன் குற்றச் செயலை கண்டித்தும், குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடாமல் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், படுகொலை செய்த சமூக விரோத கும்பலைச் சேர்ந்த அனைவரும்கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் மங்களூர் ஒன்றிய செயலாளர் எம்.சின்னதுரை தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.சுப்ரமணியன், வி.பி.முருகையன், கே.செல்வராசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

cpi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe