Skip to main content

மணல் குவாரிகளாக மாறும் ஏரி, குளங்கள் வேதனையில் விவசாயிகள்.

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

"குடிமராமத்து என்கிற பெயரில் டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளையும்,குளங்களையும் ஆளும் கட்சியினர் மணல் குவாரியாக மாற்றி கொள்ளை அடித்துக்கொண்டிருக்கின்றனர்" என்கிற குமுரல் விவசாயிகள் மத்தியில் எதிரொலிக்கிறது. அந்த கூக்குரல் தஞ்சை மாவட்டத்தில் பெரிதாகவே கேட்கிறது. பொதுப்பணித்துறை மற்றும்  ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏரிகள்,குளங்கள் மற்றும் கால்வாய்களில் இருந்து வண்டல் மண், களிமண் போன்ற சிறுவகை களிமண்களை விவசாய பயன்பாட்டிற்காகவும் வீட்டு உபயோகம் மற்றும் மண்பாண்டங்கள் செய்வதற்காகவும் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்  என பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 1951 ஏரிகள் குளங்கள் கால்வாய்களில் அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த ஏரிகளில் குடி மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.

 

thiruvidaimarudur lake clean govt order admk party leaders ilegal activities farmers shock

 

 
இதுகுறித்து  திருவிடைமருதூரை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், "இந்த திட்டம்  என்னவோ அற்புதமானவை தான். ஆனால், அதிகாரிகள் கமிசன் வாங்குவதில் அரசியல்வாதிகளையே மிஞ்சிவிட்டனர். குடிமராமத்து திட்டத்தை கடந்த ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்தார். அப்போது அதிமுகவினரின் தலையீடு அதிகமாக இருக்கிறது என்பதை வெளிப்படையாக விவசாய சங்கங்களும், அரசு அதிகாரிகளும் குமுறினர். இதனை கருத்தில் கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த ஆண்டுக்கான நிதியை ஒதுக்கி இதில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது குறிப்பாக அதிமுகவினரின் தலையீடு இருக்கவே கூடாது என அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் நிலைமை தலைகீழாக மாறி ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள ஒன்றிய செயலாளர்கள் மூலம், ஒவ்வொரு கிளையிலும்  உள்ள அதிமுக கிளை செயலாளர்களுக்கே கொடுக்கப்பட்டு குளங்கள் முழுவதும் மணல் குவாரியாக மாறியிருக்கிறது. 

 

thiruvidaimarudur lake clean govt order admk party leaders ilegal activities farmers shock


 
குடி மராமத்து பணியின் கீழ் ஒரு குளத்திற்கு 90 ஆயிரம் ரூபாயை அரசு கொடுக்கும், 10 ஆயிரம் ரூபாயை அங்குள்ள விவசாயிகள் சொந்த நிதியோ உடல் உழைப்போ, டிராக்டர்கள் மூலமாக கொடுத்து ஒரு லட்சம் ரூபாய்க்கு தூர்வார வேண்டும். ஆனால் விவசாயிகள் என்கிற பெயரில் அதிமுகவினர், காரைக்கால், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் மணல் மாபியாக்களை கொண்டு வந்து லாரிகள் மூலம் மணல் கடத்தல் பணியை, இரவு பகல் பாராமல் செய்து வருகின்றன. ஒரு லாரி மணல் 7 ஆயிரத்திலிருந்து 15,000 வரையும், டிராக்டர் 3500 ரூபாயில் இருந்து ஐந்தாயிறம் வரையும் விற்கின்றனர். இதற்கு அரசு அதிகாரிகள், காவல்துறை, அதிமுகவினர் வரை கமிசன் நீண்டு கிடக்கிறது. தாசில்தார், பொதுப்பணித்துறை அதிகாரி உள்ளிட்ட அனைவருமே இதில் பர்சண்டேஜ் முறையில் பணம் போகிறது என்று அங்குள்ள பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

 

thiruvidaimarudur lake clean govt order admk party leaders ilegal activities farmers shock


 
குறிப்பாக திருவிடைமருதூர் தொகுதியில் இருக்கும் குளங்கள் முழுவதும் மணல், மணல் மாபியாக்களின் கைகளுக்கு சென்று மணல் குவாரிகளாகவே செயல்படுகிறது. மணல் மாஃபியாக்களோ மணலை அள்ளிக் கொள்வதற்கு குளம் இருக்கும் ஊரில் ஒரு ஒப்பந்தம் போடுகிறார்கள். அதன்படி ஊருக்கு ஒவ்வொரு அமோண்ட், அந்த ஊரில் இருக்கும் திமுக கிளை செயலாளருக்கு ஒரு அமோண்ட் என கொடுத்து கனிம வளங்களை மொத்தமாக கொள்ளையடித்து வருகின்றனர். இதனை தமிழக முதல்வர் பழனிசாமி  கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்கிறார் ஆதங்கத்துடன் . 


 
இதுகுறித்து திருவிடைமருதூர் தாசில்தாரிடம் கேட்டோம், அவர் செய்தியை கேட்டவர் லைன் கிடைக்கவில்லை என கட் செய்தார், வாட்சப் மூலம் மணல் கடத்தல் செய்தியை புகைப்படத்துடன் அனுப்பினோம், பார்த்தவர் எதுவும் பேசவில்லை. அதிகாரிகளே சம்பளத்திற்கு வேலை பார்க்காமல் கையூட்டு வாங்கும் பணத்திற்காக வேலை பார்த்தால் நிலைமை என்ன ஆகும். 





 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.