Skip to main content

"டாஸ்மாக் முக்கியமா?" மாவட்ட காவல்துறைக்கு பொதுமக்கள் கேள்வி

Published on 08/05/2020 | Edited on 08/05/2020

 

vvv

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் பாலாஜி நகர் பொதுமக்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். 
 

அதில், திருவெண்ணெய்நல்லூர் பாலாஜி நகரில் அரசு மதுபானக் கடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த நகரில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஏற்கனவே இந்தக் கடையால் பெண்கள், குழந்தைகள் மக்கள் மிகுந்த இன்னல்களைச் சந்தித்து வந்தனர்.  இந்தக் கடைக்கு குடிப் பிரியர்கள் வருவதற்கு வயல்வெளி சாலை உள்ளிட்ட ஐந்து சாலைகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும் மக்கள் வசிக்கக்கூடிய இந்தச் சாலையைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் இந்த வழியாகக் குடிப்பிரியர்கள் செல்வதைத் தடுக்க காவலர்களை ஈடுபடுத்த வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.


ஆனால்  தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் மக்கள் நடமாட்டம் உள்ள பாதையான மணக்குள விநாயகர் மருத்துவமனை கிருபாபுரீஸ்வரர் தார் சாலையை ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி நடந்து செல்வதற்கு வழி இல்லாமல் செய்துவிட்டனர். 
 

இதனால் பெண்கள் குழந்தைகள் பொதுமக்கள் எவரும் நடந்து கூடச் செல்ல முடியாத அளவிலும் பள்ளத்தில் விழுந்து விபரீதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கரானாவிலிருந்து  மக்களைப் பாதுகாக்க இந்தப் பகுதியில் இரண்டு காவலர்களைப் பணியில் அமர்த்த வேண்டும். குடிப் பிரியர்கள் மக்கள் நடமாட்டம் இல்லாத வயல்வெளி சாலை வழியாக வருவதற்கும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Next Story

மக்களவைத் தேர்தல்; மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Lok Sabha elections; Orders to close liquor shops!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அதில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. 

இந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஏப்ரல் 17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை, அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.