Skip to main content

காவிரி மையப்பகுதிக்கு தண்ணீர் வரவில்லை...துக்கம் அனுசரித்து விவசாயிகள் போராட்டம்!

Published on 01/09/2019 | Edited on 01/09/2019

கடந்த 23- ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஆனால் தண்ணீர் திறக்கப்பட்டு மூன்று வாரங்கள் ஆகியும் கடைமடை பகுதிகளுக்கு நீர் வந்து சேரவில்லை. இதனால் விவசாயிகள் நூதனமான முறையில் ஆற்றின் கதவணைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

thiruvarur  Water does not reach the center of the Cauvery ... Farmers struggle to adjust to mourning!



கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலைக்கு வந்தது. இந்நிலையில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டார். பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்ட, அதே நேரத்தில் ரூபாய் 500 கோடி நிதியை ஒதுக்கிய தமிழக அரசு குடிமராமத்து பணிகளை முடுக்கிவிட்டது. பெரும்பாலான பாசன வாய்க்கால்களிலும், ஏரிகளிலும்  மந்த கதியில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முழுமையடையாததால் ஆறுகளிலும், வாய்க்கால்களிலும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட தண்ணீர் இதுவரை வரவில்லை.

thiruvarur  Water does not reach the center of the Cauvery ... Farmers struggle to adjust to mourning!


இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு 20 நாட்கள் ஆகியும், திருவாரூர் மாவட்டத்திற்கு தண்ணீர் வந்தடையவில்லை என கூறி விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் மாங்குடி விவசாயிகள் ஆற்றுபாலங்களுக்கு மாலை அணிவித்து, பழம், அகர்பத்தி, சாம்பிராணி வைத்து அஞ்சலி செலுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

thiruvarur  Water does not reach the center of the Cauvery ... Farmers struggle to adjust to mourning!


இது குறித்து விவசாயி சங்கரன் கூறுகையில் "வழக்கமாக ஜூன் 12- ஆம் தேதி திறக்க வேண்டிய காவிரி தண்ணீர் வழக்கம்போல் திறக்காமல், தாமதமாக திறக்கப்பட்டதால் குறுவை் சாகுபடியை இழந்து தவிக்கிறோம். சம்பா சாகுபடிக்காகவாவது தண்ணீர் கிடைக்கும் என்று நினைத்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால் இதுநாள் வரை தண்ணீர் வந்து சேரவில்லை.  திருவாரூர் மாவட்டத்திற்கு தண்ணீர் வந்து சேருவதற்கு தமிழக அரசின் மெத்தனப் போக்கும், முழுமை பெறாத குடிமராமத்து பணிகளும்,  மணல் கொள்ளையுமே காரணம்," என்று ஆதங்கப்படுகிறார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.