Skip to main content

பகலில் வீட்டை உடைத்து கொள்ளையடிக்கும் திருடர்கள்...கண்டுபிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை!

Published on 01/09/2019 | Edited on 01/09/2019

தமிழகத்தில் வழிபறி, வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடிக்கும், குற்ற சம்பவங்கள் பட்ட பகலிலேயே அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் அருகே தேவர்கண்டநல்லூர் கடைவீதி அருகே குமுதா என்பவரது வீட்டில் மகன் ராஜ்குமார் மற்றும்  மருமகள் ஆர்த்தி வசித்து வருகின்றனர்.

thiruvarur thief continue break into houses during the day Unable to find police


இந்நிலையில் ஆர்த்தி பிரசவத்திற்காக திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த தகவலை தெரிந்து கொண்ட திருடர்கள் காலையிலேயே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிலிருந்த 15 பவுன் மற்றும் 20 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆர்த்தியின் குடும்பத்தினர் கொரடாச்சேரி போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

thiruvarur thief continue break into houses during the day Unable to find police


இந்த பகுதியில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் புதியது இல்லையாம், தேவர்கண்டநல்லூர், குளிக்கரை, அம்மையப்பன் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. 

thiruvarur thief continue break into houses during the day Unable to find police


தேவர்கண்டநல்லூர் பகுதியில் கொள்ளை நடந்த, அதேநாளில் பட்டப்பகலில் தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் மனோகரன் தனது வளர்ப்பு மகளின் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த 50 பவுன் நகையையும், 20 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து அக்கிராமத்தினர் கூறுகையில் "குழந்தையில்லாத குறையைப்போக்கவும், ஆதரவற்ற பிள்ளைக்கொரு நல்ல வாழ்க்கை கொடுக்கவேண்டும் என்றும் ஆதரவற்ற பிள்ளையை தத்தெடுத்து வளர்த்து நல்ல வரன் பார்த்து திருமண ஏற்பாடும் செய்தனர்.

thiruvarur thief continue break into houses during the day Unable to find police



அவர்களுக்கு கள்நெஞ்சம் உள்ளவர்கள் இப்படி செய்து முடக்கி வைத்துவிட்டனர். இதை காவல்துறை உடனே கண்டுபிடித்து கொடுக்கனும்," என்றனர் அக்கிராமத்தினர். இந்த பகுதிகளில் நிகழும் கொள்ளை சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்தவும், திருடர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்யவும், கொள்ளை போன நகை மற்றும் பணத்தை மீட்டு தர வேண்டும் என்று காவல்துறைக்கு கோரிக்கை விடுத்தனர் அப்பகுதிமக்கள். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.