Skip to main content

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றக்கூட்டம் முடியும் வரை இரவில் காத்திருப்பு போராட்டம்

Published on 27/01/2019 | Edited on 27/01/2019
p

 

திருவாரூர் திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக  27 ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர் போராட்டக்குழுவினர்.

 

திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் இன்று  ஜனவரி 26  குடியரசு தினத்தில் நடைப்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் நிறைவில், " திருக்காரவாசல் ஹைட்ரோகார்பன் எரிவாயு  திட்டத்தை உடனே கைவிட மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக அமைச்சரவை கூடி நிரந்தர தடை விதிக்க வேண்டும்.

 

p

 

திட்டத்தின் நிலைக்குறித்தும், மத்திய அரசை வலியுறுத்தியும் 27. 01. 2019 முதல் மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை பிப்ரவரி 13 நாடாளுமன்றக் கூட்டம் முடியும் வரை திருக்காரவாசலில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது  என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போராட்டக்குழுவை சேரந்த பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்