Skip to main content

400 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது!

Published on 05/10/2019 | Edited on 05/10/2019

திருச்சி நகை கொள்ளையை தொடர்ந்து தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறையினர் வாகன சோதனையை நடத்துகின்றனர்.
 

thiruvarur incident



அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தங்கமணி பில்டிங் அருகே காவல் ஆய்வாளர் இராஜேந்திரன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஷைலோ காரினை மறித்து சோதனையை துவங்குவதற்கு முன்னாடியே காரிலிருந்த ஒருவன் தப்பியோடினான். அவனை பிடித்து விசாரித்தபோது அந்த கார் டிரைவர் பாண்டியன் என தெரியவந்தது.

டிரைவர் பாண்டியனை பிடித்த போலீசார், அந்த காரை சோதனை செய்தனர். அதில் 11 மூட்டைகளில் 400 கிலோ எடை கொண்ட கஞ்சா பிடிபட்டது. டிரைவர் பாண்டியனை கைது செய்து விசாரனையை மேற்கொண்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், டிரைவர் பாண்டியன் சிவகங்கை மாவட்டம், லட்சுமிபுரத்தை சேர்ந்தவன் என்பதும் சிவகங்கையிலிருந்து வேளாங்கண்ணிக்கு கஞ்சாவை கடத்தி செல்வதாகவும் தெரியவருகிறது. தப்பியோடிய மற்றொருவரையும் போலிஸார் தேடி வருவதோடு கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்களை பற்றியும் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.


கடத்திய கஞ்சாவின் தமிழகத்தின் மதிப்பு சுமார் ரூபாய் 40 லட்சத்திற்கு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. கடத்திய கஞ்சாவை இலங்கையில் விற்றால் அதன் மதிப்பு ரூபாய் ஒரு கோடியை தாண்டும் என மதிப்பிடபட்டுள்ளது. அதோடு இலங்கைக்கு வேதாரண்யம் கோடியக்கரை வழியாக கடத்த சென்றிருக்கலாம் என்கிறது காக்கிகள் வட்டாரம்.

கஞ்சா கடத்தி வந்த காரில் நூற்றுக்கும் அதிகமான நம்பர் பிளேட்டுகளும், அதிமுக கொடிகளும் இருந்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.