Skip to main content

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திருவாரூரை மிரள வைத்த விவசாயிகள் பேரணி!

Published on 23/07/2019 | Edited on 24/07/2019

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும் காவிரிப்படுகை கூட்டமைப்பு சார்பில் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணி திருவாரூரில் நடைபெற்றது. காவிரி டெல்டா பகுதிகளில் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்தும், டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள், விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யும் காவல்துறையை கண்டித்தும், காவிரி படுகை கூட்டமைப்பு சார்பில் பேரணியாக சென்று திருவாருர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

 

thiruvarur hydrocarbon project againts farmers mega rally for today petition file collector

 

 

 

இந்த பேரணியானது விளமல் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்றது. பேரணியில் திமுக அ ம முக, கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர். இறுதியாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த போராட்டத்தின் காரணமாக ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக வழி நெடுகிலும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

 

 

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக சிறு, சிறு குழுக்களாக போராடி வந்த டெல்டா பகுதி மக்கள் இன்று ஒன்று திரண்டு பேரணியாக நடத்தி எதிர்ப்பை பதிவு செய்திருப்பது வெகுஜன மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. அரசே நினைத்தாலும் இனி எங்கள் மண்ணில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதிக்கமாட்டோம்."என்கிறார்கள் கலந்துகொண்ட விவசாயிகள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.