Skip to main content

சுகாதார ஆய்வாளருக்கு வெட்டு! மீன் வியாபாரி கைது! 

Published on 12/05/2020 | Edited on 12/05/2020
thiruvarur



திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி ராமர் மடத்தை சேர்ந்தவர் கல்விபிரியன். மீன் வியாபாரியான இவர், பாமக நகர செயலாளராகவும் இருந்து வருகிறார். சம்பவத்தன்று கல்விபிரியன் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே மீன் வியாபாரம் செய்து வந்தார்.


இந்தநிலையில் மீன் வியாபாரிகள் மார்க்கெட் பகுதிகளில் மட்டுமே வியாபாரம் செய்ய நகராட்சி உத்தரவிட்டது. இதற்கு சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம்தான் காரணம் என்று கூறி, அவரை அரிவாளால் வெட்டிவிட்டு கல்விபிரியன் தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த வெங்கடாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.


இதுகுறித்து புகார் அளித்தும் கல்விபிரியனை போலீசார் கைது செய்யவில்லை. இதனை கண்டித்தும், உடனடியாக குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தியும் நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், களப்பணியாளர்கள், கரோனா தடுப்பு பணியாளர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு துவங்கியது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி. துறையின் அதிரடி உத்தரவால் கல்விபிரியன் கைது செய்யப்பட்டார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.