Skip to main content

எழுத்து வடிவம் கூட இல்லாத இந்தி மொழியை எங்களாலும் ஏற்க இயலாது- திருச்சி சிவா எம்.பி காட்டம்!

Published on 22/09/2019 | Edited on 22/09/2019

"தமிழக இளைஞர்களுக்கு வேலை இல்லாத நிலையை மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசும் செய்து வருவது  வேதனையாக  உள்ளது" என திருவாரூரில் திருச்சி சிவா கூறியுள்ளார். திருவாரூரில் தனியார் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவா கலந்துக்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

 thiruvarur graduation day trichy siva mp said about Hindi language


அப்போது "நடிகர் விஜய் அவர் விருப்பப்பட்ட தனக்கு தோன்றிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள ரயில்வே துறையில் மட்டுமல்ல, தமிழக அரசுக்கு கீழ் வரக்கூடிய மின்சாரத்துறையில் கூட வட மாநிலத்திற்கு இடமுண்டு என்ற நிலைமையை அதிமுக அரசு ஏற்படுத்தியுள்ளது. இப்படி தமிழக இளைஞர்களுக்கு வேலை இல்லாத நிலையை மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசு செய்வது விந்தையாக உள்ளது.


இந்தியாவில் உள்ள எந்த மொழியும் பொது மொழியாக வரமுடியாது. ஒற்றை மொழியை ஏற்க மற்றவர்கள் மறுப்பார்கள். உலகின் தொன்மை மொழி தமிழ் மொழி அதை வடக்கே உள்ளவர்கள் ஏற்பார்களா? மாட்டார்கள். தமிழ் மொழிக்கு தகுதி இருந்தும், பொது மொழியாக ஏற்க மறுக்கிறார்கள், எழுத்து வடிவம் கூட இல்லாத இந்தி மொழியை எங்களாலும் ஏற்க இயலாது" என கூறினார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மக்களவை தேர்தல்;தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 Lok Sabha election; public holiday announced in Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில்,தமிழகத்தில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 511 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.