Skip to main content

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கும், 'நெக்ஸ்ட்' தேர்விற்கும் எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

Published on 05/08/2019 | Edited on 05/08/2019

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கும் (NATIONAL MEDICAL COMMISSION- NMC BILL), நெக்ஸ்ட் தேர்வுக்கும் (NATIONAL EXIT TEST- NEXT) எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 300- க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையத்தை புதிதாக அமைக்க வகை செய்யும் மசோதா மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இந்த தேசிய மருத்துவ ஆணைய மசோதாவால் மருத்துவத்துறைக்கு பெரும் பாதிப்பு நேரிடும் என்பதால் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவ கல்லூரி மாணவர்களும், மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

THIRUVARUR GOVT MEDICAL COLLEGE STUDENTS STRIKE NMC BILL, NEXT EXAM AGAINST AUGUST 8 ALL OVER INDIA DOCTORS STRIKE

 

இந்த மசோதா மூலம், மருத்துவ கவுன்சிலின் அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்படுவதுடன், மருத்துவ சேவைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் கருத்து வெளியிட்டது. மேலும் எம்பிபிஎஸ் படிப்பின் இறுதி தேர்வு, நெக்ஸ்ட் (NATIONAL EXIT TEST- "நேஷனல் எக்சிட் டெஸ்ட்") என்ற பெயரில் பொதுத்தேர்வாக நடத்துவதற்கும், இந்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதால் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

 

THIRUVARUR GOVT MEDICAL COLLEGE STUDENTS STRIKE NMC BILL, NEXT EXAM AGAINST AUGUST 8 ALL OVER INDIA DOCTORS STRIKE

 

இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 300- க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் ஒன்றிணைந்து மருத்துவ கல்லூரி வளாகத்தில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கும்,நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொது மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

 

THIRUVARUR GOVT MEDICAL COLLEGE STUDENTS STRIKE NMC BILL, NEXT EXAM AGAINST AUGUST 8 ALL OVER INDIA DOCTORS STRIKE

 


இதனிடையே டெல்லியில் இன்று இந்திய மருத்துவ சங்கக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஆகஸ்ட் 8- ஆம் தேதி நாடு தழுவிய மருத்துவர்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆகஸ்ட் 8- ஆம் தேதி காலை 06.00 AM முதல் 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்படவுள்ளனர். மருத்துவர்களின் வேலை நிறுத்த அறிவிப்பால் மருத்துவமனை உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் என பொதுமக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.





 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.