Skip to main content

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தவர் விஷம் குடித்ததால் பரபரப்பு...

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பிரபாகரன் என்பவர் திடிரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

thiruvarur collector office incident

 

 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாராந்திர குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் வழக்கம் போல் இன்று நடைபெற்று வந்தது . அப்போது மனு அளிக்க வந்தவர்களில் ஒருவரான நீடாமங்கலம் தாலுக்கா, வடபாதிமங்கலம் அருகே உள்ள வேற்குடி கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் திடிரென தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் உடனடியாக அவரது கையில் இருந்த விஷபாட்டிலை பிடுங்கியதோடு, அவரையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற பிரபாகரனுக்கு சொந்தமிழ்செல்வி (26) என்கிற மனைவியும், குகன்ஷா (1) என்கிற மகளும் உள்ளனர். கடந்த ஆண்டு கஜா புயலின்போது சேதமடைந்த தனது வீட்டை சீரமைக்க விடாமல் அருகில் வசிக்கும் சிலர் தடுப்பதாகவும், இதனால் கடந்த ஒரண்டாக தனது மனைவி குழந்தையுடன் மாட்டு கொட்டைகையில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். இதுக்குறித்து காவல் துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நீதிகேட்டு மாவட்ட ஆட்சியரிடம் வந்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.