Skip to main content

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவ மாணவிகள் நள்ளிரவில் ஆர்ப்பாட்டம்!

Published on 13/04/2022 | Edited on 13/04/2022

 

Thiruvarur Central University students struggle at midnight!

 

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தில், டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள காவிரி விடுதியில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது பாஜகவின் மாணவர் அமைப்பினரான ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் 60 மாணவ மாணவிகள் காயம் அடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பைக் கண்டித்து பல்வேறு இடங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.


இந்தநிலையில் தமிழ்நாட்டில் உள்ள ஒரே மத்திய பல்கலைக்கழகமான திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் திடீரென கையில் தீப்பந்தத்துடன் பல்கலைக்கழக வளாகத்தில் ஏபிவிபி அமைப்பிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடியே பல்கலைக்கழக வாசல் நோக்கி பேரணியாக சென்றனர். தொடர்ந்து மத்திய பல்கலைக்கழக வாசலில் ஜே.என்.யூ. மாணவர்களை தாக்கியவர்களை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி முழக்கமிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

 

திடீரென நள்ளிரவில் தீப்பந்தத்துடன் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியதால் பல்கலைக்கழக பகுதி மட்டுமின்றி, சுற்றியுள்ள பகுதிகளிலும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு கல்லூரி முதல்வர் மீது வழக்குப்பதிவு!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
case filed against suspended govt college principal

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்தவர் கீதா. இவர் கடந்த சில ஆண்டுகளாக தமிழக கல்லூரிக் கல்வி இயக்குநராகவும் பொறுப்பு பதவி வகித்து வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிதி மோசடி மற்றும் நிர்வாக சீர்கேடு காரணமாக எழுந்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் பொறுப்பில் இருந்து கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து நேற்று முன்தினம் (01.02.2024) இவர் மீண்டும் கல்லூரியின் முதல்வராக பதவியேற்றார். அதே சமயம் தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் தனராஜன், திரு.வி.க. அரசு கல்லூரிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் முதல்வர் கீதாவை பணியிடை நீக்கம் செய்து தனராஜன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் மோசடி புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருவிக கல்லூரி முதல்வர் கீதா மீது அரசு ஆவணங்களை கிழித்ததாகவும், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் தஞ்சை மண்டல கல்லூரி இணை இயக்குநர் தனராஜன் புகார் தெரிவித்துள்ளார். இதனயடுத்து கீதா மீது 5 பிரிவுகளின் கீழ் திருவாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story

வெடிக் கடையில் பட்டாசுகள் வெடித்து விபத்து

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

thiruvarur valanfgaimaan shop incident

 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் செந்தில் குமார் என்பவர் வெடிக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக விற்பனைக்கு வைத்திருந்த வெடிகள் வெடித்து தீ மளமளவெனக் கடை முழுவதும் பரவியது. இதனால் கடையிலிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. மேலும் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

 

இது குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதே சமயம் அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட வெடிக் கடைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.