Advertisment

திருவாரூர் தொகுதியில் நிவாரணப்பொருட்கள், பொங்கல் பரிசு  வழங்க அனுமதி!

எ

திருவாரூர் தொகுதியில் கஜா நிவாரணப்பணிகளை தொடரவும், நிவாரணப்பொருட்களை வழங்கவும் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மேலும், பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்க அனுமதி அளித்துள்ளது. ஆனால், எந்த அரசியல்வாதியும் நிவாரணபொருட்களை வழங்கக்கூடாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமே நிவாரண உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

Advertisment

திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழக தலைமை செயலாளர் சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு இன்று ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அக்கடிதத்தில், திருவாரூரில் கஜா புயல் நிவாரண பணிகளை தொடருவதற்கு தமிழக அரசை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

Advertisment

இக்கடித்தத்திற்கு பதிலளித்துள்ள தலைமை தேர்தல் ஆணையம், திருவாருரில் நிவாரண பணிகளை தொடர தமிழக அரசுக்கு அனுமதி அளித்துள்ளது.

Commission Election
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe