
தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தும் முடிந்து சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம்தேர்தல்நடத்தை வழிமுறைகள் அமலில்இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர்தீவிரவாகனசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலுவிற்குசொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எ.வ.வேலுவின் கல்லூரி, அறக்கட்டளை உள்ளிட்ட 10 இடங்களிலும், அதேபோல் அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும்20க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்தவருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதாக புகாரளிக்கப்பட்டதால்இந்த சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின் எ.வ.வேலுவை ஆதரித்து இன்று (25.03.2021) திருவண்ணாமலையில் பிரச்சாரம் செய்து வருகிறநிலையில் இந்த வருமான வரித்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஸ்டாலின் தங்கியிருந்த கல்லூரியிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.
Follow Us