Skip to main content

திருவண்ணாமலையில் 144 உத்தரவை மீறியதாக தினமும் 650 வழக்குகள்!

Published on 29/04/2020 | Edited on 29/04/2020

 

Thiruvannamalai lockdown - daily 650 cases

 

கரோனா இல்லாத மாவட்டமாக்க, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் கடுமையாக முயற்சித்து வருகிறது. வெளிமாநிலம் சென்று வந்தவர்கள், வெளிமாநிலம் சென்று வந்தவர்களின் குடும்பத்தார் மட்டுமே கரோனா நோயால் பாதிக்கப்பட்டு, 10 பேர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். அது பின்னர் சுகாதார பணியாளர்களை தாக்கிய வகையில் 15 நோயாளிகளாக மாறியது. இதில் 11 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் இன்னும் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இது சமூக தொற்றாக மாறிவிடக்கூடாது என்பதற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி, இரண்டாவது ஈகிள் டீம் உருவாக்கம் செய்து மாவட்டத்தை வலம் வரசெய்து அநாவசியமாக வெளியே சுற்றுபவர்களை மடக்கி பிடித்து கைது செய்யவைத்துள்ளார். அதேபோல் நகரம், பேரூராட்சி பகுதிகளில் காவலர்கள் மூலமாக தீவிர கண்காணிப்பை ஏற்படுத்தியுள்ளார். அதேபோல் பெட்ரோல் பங்க்களில் பெட்ரோல் போட வருபவர்களின் வாகன எண்ணை பதிவு செய்து அதன் வழியாகவும் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு அநாவசியமாக வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தினமும் 600க்கும் குறையாத வழக்குகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஏப்ரல் 29ந்தேதி மட்டும், 675 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 681 பேர் கைது செய்யப்பட்டு 663 இருசக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட மொத்தம் 667 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட இந்த 36 நாட்களில் மொத்தம் 22,379 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 23,202 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 22,335 இருசக்கர வாகனங்கள், 52 ஆட்டோக்கள், 145 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 22,532 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதாவது தினசரி 650க்கும் குறையாத வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், பைக்கில் ட்ரிபிள்ஸ் போவது, வெட்டியாக சும்மாவே ஊரை சுற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை இருந்தபடிதான் இருக்கின்றன. இன்னமும் கரோனா குறித்த பயம் மக்களிடம் இல்லாமல் உள்ளது என வேதனைப்படுகின்றனர் காவல்துறை அதிகாரிகள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.