Skip to main content

இரவோடு இரவாக திறக்கப்பட்ட ஜெ. சிலை... அப்புறப்படுத்திய அதிகாரிகள்...!

Published on 16/03/2020 | Edited on 16/03/2020

திருவண்ணாமலை மாவட்டம்,   செங்கம் நகரத்தில் திருவண்ணாமலையிலிருந்து பெங்களூர் செல்லும் சாலையில் செங்கம் ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் எதிரே சாலையோரம் நெடுஞ்சாலை இடத்தில் மார்ச் 15ந்தேதி இரவு திடீரென மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலை பீடம் கட்டி வைக்கப்பட்டது.

 

Thiruvannamalai jayalalitha statue issue

 



அ.தி.மு.கவின் செங்கம் ஒன்றிய மகளிர் அணி துணைசெயலாளர் ஷகிலா ஏற்பாட்டில் அந்த சிலை வைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த சிலை வைத்தது தெரியவந்தது. இந்த தகவல் செங்கம் வட்டாச்சியர் பார்த்தசாரதிக்கு தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியான அவர் இதுப்பற்றி மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, ஆட்சியர் கந்தசாமிக்கு தகவல் அனுப்பினார். இதையடுத்து அந்த சிலையை உடனே அகற்றுங்கள் என உத்தரவிட்டனர்.

அதன்படி மார்ச் 16ந்தேதி காலை வட்டாச்சியர் பார்த்தசாரதி செங்கம் காவல்துறைக்கு மனு தந்தார். பத்துக்கும் அதிகமான போலீஸார் அங்கு குவிந்தனர். பேரூராட்சி ஊழியர்களின் உதவியோடு ஜெயலலிதாவின் சிலையை அங்கிருந்து அகற்றி டாடா ஏசி வாகனத்தில் ஏற்றிச் சென்று வருவாய்த்துறை அலுவலகத்தில் வைத்துள்ளனர். இதுப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.   

      

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.