Skip to main content

எஸ்.ஐ தற்கொலைக்கு டி.எஸ்.பி காரணமா? சர்ச்சையில் தி.மலை!

Published on 12/07/2020 | Edited on 13/07/2020

 

thiruvannamalai incident...

 

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள ஜம்னாமத்தூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்தவர் ரவி. 52 வயதான ரவியை கரோனா பரவல் தொடங்கியது முதல் வேலூர் – திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் சோதனைச் சாவடி கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். பணியில் இருந்து ஜூலை 9ஆம் தேதி காலை ஜம்னாமத்தூரில் உள்ள தனது குடியிருப்புக்கு வந்துள்ளார். அப்படி வந்தவர் சக போலீஸ் நண்பர்களிடம் செல்ஃபோனில் பேசியுள்ளார்.

ஜூலை 10ஆம் தேதி காலை காவல்நிலைய பணிக்கு நீண்ட நேரமாகியும் வரவில்லையென செல்ஃபோனில் தொடர்பு கொண்டுள்ளார்கள், ஃபோனை எடுக்கவில்லையாம். இதனால் நேரடியாகச் சென்று அறை கதவைத் தட்டியபோது கதவு திறக்கப்படவில்லையாம். பின்னர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது, சீலிங் ஃபேனில் தூக்குமாட்டிக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டு இருந்துள்ளார்.

இதுபற்றி உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தந்துவிட்டு உடனடியாக உடலை கீழே இறக்கி உடற்கூராய்வுக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.  இந்நிலையில் 10ஆம் தேதி மாலை உடலை வாங்கமாட்டோம் என ரவியின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இதுப்பற்றி நாம் காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர். உயர் அதிகாரியாக இருந்தாலும், ஏன், எதுக்கு என கேள்வி எழுப்புவார். ஆரணியில் அவர் பணியாற்றியபோது, ஒரு பெண் காவலர் விவகாரத்தில் பெயர் அடிப்பட்டு பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டவர். அவருக்கும் போளுர் டி.எஸ்.பி குணசேகரனுக்கும் சண்டை. வேலை செய்யவில்லை எனச் சொல்லி டார்ச்சர் செய்கிறார் என சக காவல்துறை நண்பர்களிடம் புலம்பியுள்ளார். டி.எஸ்.பி குணசேகரன், ரவியை போளுர் கேம்ப் ஆஃபிஸ் வந்து சந்திக்க சொன்னார். அப்போது இருவருக்கும் செல்ஃபோனில் பேசும்போது, சண்டை வந்துள்ளது. அந்த விரக்தியில் தான் தற்கொலை செய்துக்கொண்டார். தற்கொலை செய்துக்கொள்ளும் முன் கடிதம் எழுதிவைத்துள்ளார். அந்தக் கடிதத்தை மறைத்துவிட்டார்கள். அதேபோல் டி.எஸ்.பி குணசேகரனிடம் பேசிய செல்ஃபோன் ஆடியோ கால் டெலிட் செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.