Skip to main content

முழு ஊரடங்கு: முதல்வர் உத்தரவையடுத்து களத்தில் இறங்கிய திமுகவினர்..!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021

 

Thiruvannamalai DMK members in corona field work


கரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, தினமும் ஆயிரக்கணக்கில் இறக்கின்றனர். தமிழ்நாட்டில் தினமும் சுமார் 35 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் நிலையில் 300க்கும் அதிகமானோர் தினசரி இறக்கின்றனர். இதனால் தொடர்ச்சியாக மூன்றாவது வாரமாக முழு ஊரடங்கை அறிவித்து செயல்படுத்திக்கொண்டுள்ளது தமிழக அரசு.

 

முழு ஊரடங்கு இருப்பதால் சாலையோர வியாபாரிகள், சிறு வர்த்தகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், மாட்டு வண்டி தொழிலாளர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உணவுக்கு கூட வழியில்லாமல் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோர் போன்றோரும் உணவில்லாமல் தவிக்கின்றனர். அதேபோல் சாலைகளில் துப்புரவு பணி மேற்கொள்ளும் தூய்மைப் பணியாளர்கள் சிறிய உணவு விடுதிகள் கூட இல்லாததால் சாப்பிட முடியாமல் தவிக்கின்றனர்.

 

கரோனா நிவாரண பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என திமுகவினருக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வேண்டுகோளை ஏற்று சில இடங்களில் திமுக நிர்வாகிகள் உணவுப் பொருட்கள் வழங்குவது, உணவு வழங்குவது என களமிறங்கியுள்ளனர்.

 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரைச் சேர்ந்த, வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், தினமும் உணவு இல்லாதோருக்கு உணவு வழங்கும் பணியினை தொடங்கியுள்ளார். தினசரி 200க்கும் அதிகமானவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்குகிறார். இந்தப் பணி தொடர்ச்சியாக நடைபெற கட்சியினர் சிலரிடம் பொறுப்பை ஒப்படைத்து அவர்கள் மூலமாக நகரத்தின் அனைத்துப் பகுதிக்கும் சென்று உணவு இல்லாமல் தவிப்பவர்களுக்கு மூன்றுவேளை உணவு வழங்கச் சொல்ல, அதன்படி செயல்படுத்த துவங்கியுள்ளனர். திருவண்ணாமலை நகரிலும் சில இடங்களில் திமுக இளைஞர்கள் சிலர் உணவு வழங்கும் பணியை தொடங்கியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.