Skip to main content

தீபத்திருவிழா- ஜெயா டிவிக்கு 'நோ' சொன்ன முதல்வர் அலுவலகம்!

Published on 09/12/2019 | Edited on 09/12/2019

திருவண்ணாமலை கார்த்திகை மாத தீபத்திருவிழாவை தீபம் ஏற்றுவதை நாடு முழுமைக்கும் நேரலை செய்தது தனியார் தொலைக்காட்சிகளில் ஜெயா டிவி மட்டுமே. அதன்பின்பே பல தொலைக்காட்சிகள் நேரலை (Live) தொடங்கின. கடந்த திமுக ஆட்சி காலத்தில் கூட ஜெயா டிவிக்கு நேரலைக்கு அனுமதி தந்துள்ளார்கள்.


இந்தாண்டு டிசம்பர் 11ந்தேதி மாலை 06.00 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ள நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னட செய்தி தொலைக்காட்சிகள் பல நேரலை செய்ய இந்து சமய அறநிலையத்துறையிடம் அனுமதி கேட்டுள்ளது. இதில் சில தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி தந்துள்ளது இந்து சமய அறநிலையத்துறை.

thiruvannamalai deepam festival live jaya tv not get permission cm office

ஜெயா டிவி நேரலை செய்யவும் முதலில் அனுமதி தந்துள்ளார்கள். பின்னர் திடீரென அனுமதியில்லை எனச்சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அலுவலகத்தில் இருந்து அழைத்து, ஜெயா டிவிக்கு அனுமதி தராதீர்கள் எனச்சொன்னதாக கூறப்படுகிறது. அதனை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் அலுவலகம் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

thiruvannamalai deepam festival live jaya tv not get permission cm office


ஆளும் கட்சி சார்பில் நடத்தப்படும் ஜெ தொலைக்காட்சி கோயிலுக்குள் இருந்து தீபம் ஏற்றுவதை நேரலை (Live) செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது. அதேபோல் தீபம் ஏற்றுவதை மலைமேலிருந்து நேரலை செய்யவும் தந்துள்ளனர் அதிகாரிகள். கோயிலுக்குள் இருந்து தீபம் ஏற்றுவதை நேரலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வரும், அதே நேரத்தில் 2666 அடி உயரமுள்ள மலையில் உச்சியில் இருந்து நேரலை செய்வதற்கு தரையில் இருந்து மலை உச்சிக்கு கேபிள் போட்டு வருகின்றனர் ஜெ தொலைக்காட்சி குழுவினர்.


ஜெ தொலைக்காட்சிக்கு நேரலை செய்வதற்கான வசதி அவ்வளவாக கிடையாது. இதற்காக மற்றொரு பிரபல சேனலின் உதவியுடன் இந்த பணிகளை செய்து வருவதாக சேனல் வட்டாரங்கள் கூறுகின்றன.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.