Skip to main content

தடுப்பணையை இடித்த ஆளும் கட்சி பிரமுகர்கள்...கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்.

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுக்காவில் உள்ளது செங்கபுத்தேரி கிராமம். இந்த கிராமத்தின் வழியாக கொங்கரன் கால்வாய் செல்கிறது. கடந்த 2017- 2018 ஆம் ஆண்டு நிதியாண்டில் 5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு கால்வாயின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டது.

 

அந்த தடுப்பணை ஒன்றை அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலம் மகன் பாலாஜி தலைமையில் 20 பேர் கொண்ட குழு, கால்வாய் குறுக்கே நீரை சேமித்து வைக்க கட்டப்பட்ட தடுப்பணையை ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடித்து  தள்ளியுள்ளனர். அவர்களிடம் அந்த கிராமத்தை சேர்ந்த விவசாய பொதுமக்கள் கேள்வி எழுப்பியபோது, இந்த தடுப்பணையால் தான் ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. அதனால் தான் இடிக்கிறோம் எனச்சொல்லியுள்ளனர்.

 

 

thiruvannamalai dams demolished in admk party some persons no care in govt officers peoples shock

 

ஏரிக்கு நீர் போகும் முன் அந்த வழியாகவுள்ள விவசாய நிலங்கள் மற்றும் கிணறுகள் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர வேண்டும் என்பதற்காகவே கால்வாய்களின் குறுக்கே விவசாயத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து குறிப்பிட்ட இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று கூறி கட்டினார்கள்.

 

அதனை சிலர் தங்களது சுய நலத்துக்காக இடித்து தள்ளியுள்ளனர். பொது சொத்தான தடுப்பணையை இடித்து தள்ளியதில் வில்வாரணி, செங்கப்புத்தேரி கிராமத்தில் பதட்டம் நிலவுகிறது. இதனை தணிக்க சம்மந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் கந்தசாமிக்கு புகார் அனுப்பியுள்ளனர்.

 

thiruvannamalai dams demolished in admk party some persons no care in govt officers peoples shock

 

அவர்கள் ஆளும் கட்சியான அதிமுகவை சேர்ந்தவர்கள் எனக்கூறப்படுகிறது. அதனால் தான் அவர்கள் தைரியமாக இடித்தார்கள், இடிக்கும் போதே வருவாய்த்துறையினருக்கு தகவல் சொல்லியும் அவர்கள் அதுப்பற்றி கண்டுக்கொள்ளவில்லை என குற்றம்சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள்.




 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.