Skip to main content

திருவண்ணாமலை - 54 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று

Published on 31/05/2020 | Edited on 01/06/2020

 

thiruvannamalai


திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று மே 30ஆம் தேதியோடு 362 ஆக இருந்தது. மே 31ஆம் தேதி புதியதாக 54 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களோடு சேர்த்து 416 பேர் கரோனா நோயாளிகளாக உள்ளனர். 300க்கும் மேற்பட்டோருக்கான பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரியவரவில்லை.
 


தற்போது கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவிதம் பேர் வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய திருவண்ணாமலை மாவட்டத்தினர். 30 சதவிதம் பேர் வெளிமாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை வந்தவர்கள். 20 சதவிதம் பேரே திருவண்ணாமலை மாவட்டத்துக்குள்ளேயே இருந்தவர்கள். அதில் கரோனா மருத்துவப் பணியில், தடுப்புப் பணியில் ஈடுப்பட்டுயிருந்தவர்களும் அடக்கம்.  


கரோனா சிகிச்சை முடிந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து இதுவரை 108 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை” - தி.மு.க வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMK candidate CN Annadurai crictized edappadi pazhaniswamy for lok sabha election

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு சி.என்.அண்ணாதுரை அளித்த பேட்டி பின்வருமாறு...

2014 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தீர்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தீர்கள். அப்போது கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் என்ன? இதுவரை தொகுதிக்கு செய்தது என்ன?

“ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தேனோ அதை ஒரு ஆளுங்கட்சி எம்.பி செய்வதை விட அதிகமாக நான் செய்திருக்கிறேன். 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி இருக்கிறோம். அதேபோல், கொரோனா காலத்தில் ஏழை எளிய மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அதை சரிப்படுத்தும் விதமாக பி.எஸ்.என்.எல் டவர் இரண்டு கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த டவர்கள் எல்லாம் பயன்பாட்டுக்கு வரும். அதிகபட்சமான கிராம சாலைகள், மூன்று ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதே போல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம்”

இந்த 2024 மக்களவைத் தேர்தலில் என்ன வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள்?

“எதிர்க்கட்சி வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது மோடி அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். ஆனால், பாஜக தமிழ்நாட்டைத் திட்டமிட்டு புறக்கணித்தார்கள். அதையும் தாண்டி, போராடி சில திட்டங்களை அதிகாரிகளின் துணையுடன் செய்திருக்கிறோம். அந்த வகையில் தொகுதி மக்களுக்காவும், தொகுதி பிரச்சினைக்காகவும் நாடாளுமன்றத்தில் 507 கேள்விகள் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து அதிகமாக கேள்வி எழுப்பியதில் இது இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது

மோடி அரசாங்கத்துக்கோ, மோடி அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களுக்கோ தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டும் என்று ஒரு துளி கூட அக்கறை இல்லை. திட்டமிட்டு அவர்கள் புறக்கணித்தார்கள். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது இவ்வளவு திட்டங்கள் கொண்டு வந்திருக்குறோம் என்றால்  ஆளுங்கட்சி வரிசையில் அனைத்து ஒன்றிய அரசு திட்டங்களையும் கண்டிப்பாக இந்த திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி கொண்டு வந்து இந்த பகுதி வளர்ச்சிக்கும் மக்களுடைய வளர்ச்சிக்கும் கண்டிப்பாக நான் துணையாக இருப்பேன்”.

திமுக தேர்தல் அறிக்கையும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் ஒரே மாதிரியாக இருக்கிறதே?

“இந்த இரண்டு கட்சிகளும் ஒத்த கருத்து உடையது தானே. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக பாடுபட்டார். ஆனால் இந்த தேர்தலுக்குப் பிறகு, இந்தியாவுடைய வளர்ச்சிக்கு ராகுல் காந்தியோடு துணையாக இருந்து செயல்படுவார்”.

காங்கிரஸ் அறிவித்த மகாலட்சுமி திட்டத்தின் மூலம் ஏழைப் பெண்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பது எப்படி சாத்தியம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“எத்தனையோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அம்பானிக்கும், அதானிக்கும் பல லட்சம் கோடி தள்ளுபடி செய்யும் போது, ஏழை மக்களுக்கு கொடுக்கும்போது மட்டும் அது சாத்தியமாகாதா?. இந்த திட்டம் கண்டிப்பாக சாத்தியப்படும். அதனால், தேர்தல் அறிக்கையில் கொடுத்திருக்கிறோம்”.

இந்தியா கூட்டணி வாரிசு கூட்டணி என்றும் ஊழல் குற்றம் இல்லை என்றும் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“உலக வரலாற்றிலேயே பா.ஜ.க ஆட்சியில் நடந்த மாதிரி ஊழல் எங்கும் இருந்ததில்லை. அவர்கள் அறிவித்த தேர்தல் பத்திரம் திட்டம் கூட ஊழல் செய்வதற்காக கொண்டு வந்தார்கள்”.

திமுக கூட்டணியில் இருக்கும் வேட்பாளர்கள் தான் பொருளாதார பின்னடைவு உள்ள வேட்பாளர்கள். ஆனால், அதிமுக வேட்பாளர்கள் எளிமையான வேட்பாளர்கள் தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே?

“போன வாரம் அவர் பிரச்சாரம் செய்யும் போது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலை சட்டமன்றத் தேர்தல் என்று சொல்கிறார். என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை. அவருக்கு என்ன தெரியும்?. கடந்த தேர்தலில் நான் வேட்பாளராக நிற்கும் போது என்ன சொத்து மதிப்பு இருந்தது, இப்பொழுது என்ன சொத்து மதிப்பு இருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள். ஏற்கெனவே இருந்த சொத்தை எல்லாம் மக்களுக்காக செலவு செய்திருக்கிறோம். ஏனென்றால், மோடி அரசு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை எல்லாம் கொரோனாவை காரணம் காட்டி இரண்டு வருடம் நிறுத்திவிட்டார்கள். அந்த சமயத்தில் கூட மக்களுக்கான உதவி செய்திருக்கிறோம். நாங்களும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்” எனக் கூறினார்.

Next Story

“மோடி சொன்னதென்ன? தமிழக முதல்வர் செய்ததென்ன?” - தீவிர வாக்கு சேகரிப்பில் சி.என்.அண்ணாதுரை

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
“What did Modi say? What did the Tamil Chief Minister do?” - CN Annadurai in serious vote collection

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்நிலையில், திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் சி.என்.அண்ணாதுரை திமுக அரசின் நலத்திட்டங்களை சொல்லி வாக்கு சேகரித்தார். அவர் பேசியதாவது “மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிற தமிழக முதல்வரின் வேட்பாளராக உங்கள் முன்னே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன்பு சட்டமன்ற தேர்தலின் போது நமது முதல்வர் வாக்குறுதிகளைக் கொடுத்தார். சொன்ன வாக்குறுதிகளையும் செய்தார், சொல்லாதவற்றையும் செய்திருக்கிறார்”.

பிரதமர் மோடி என்ன செய்திருக்கிறார் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியைக் குறைப்போம் என்றார். கேஸ் சிலிண்டர் விலையைக் குறைப்போம் என்றார். ரூ.400 இருந்த சிலிண்டர் 1000 ரூபாயாக விலை ஏறிப்போய் விட்டது. எல்லோரின் அக்கவுண்ட்டிலும் 15 லட்சம் போடுவேன் என்றார். 15 பைசா கூட போடவில்லை. பெட்ரோல், டீசல் விலைவாசியைக் குறைப்போம் என்றார், குறைக்கவில்லை, விலை தான் ஏறிப்போச்சு. வரியினை ஏற்றியதால் தாய்மார்கள் வாங்கும் தங்கம் 52 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மக்களிடம் வரியின் மூலமாக பிடுங்கி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு  சலுகை கொடுக்கிறது மோடி அரசு. இந்த தேர்தலில் தான் அந்த அரசினைத் தூக்கி எரிய வேண்டியது முக்கியமானதாகும்.

நமது முதல்வரோ ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்டங்களை செய்வேன் என்றார். செய்து கொண்டிருக்கிறார். மகளிர் உதவித்தொகை ரூ.1000 மாதம் தருவதாகச் சொன்னார், தந்து விட்டார். விடுபட்டவர்களுக்கு விரைவில் வழங்கவுள்ளார். கட்டணமில்லா பேருந்து பயணத்தை சாத்தியமாக்கியிருக்கிறார். நமது குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார். பெண் குழந்தைகளின் கல்லூரி படிப்பிற்கு மாதம் ஆயிரம் ரூபாய் தந்திருக்கிறார். கொரோனா உதவி தந்திருக்கிறார். விவசாயக் கடன் தள்ளுபடி செய்திருக்கிறார். 

இந்தப் பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதியாக மகளிர்குழு கடன் தொகை வட்டியில்லா கடனாக தரப்படும் என்றிருக்கிறார். மகளிர் குழு பெண்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றிருக்கிறார். இப்படியாக எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்வர் வாரி வழங்கியிருக்கிறார். வழங்கவும் உள்ளார். அவரின் வேட்பாளராக உங்கள் முன்னே உதயசூரியனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். ஏற்கெனவே எனக்கு வாய்ப்பு அளித்திருந்தீர்கள். மீண்டும் மக்களுக்காக பணியாற்ற வாய்ப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.