Skip to main content

ரவுடி ஃபங்க் பாபு படுகொலை... பழிக்குப் பழியா? போலீஸ் விசாரணை!

Published on 03/12/2020 | Edited on 03/12/2020

 

Thiruvannamalai babu police investigation


திருவண்ணாமலை நகரம், பழைய பைபாஸ் சாலையில் டிசம்பர் 3ஆம் தேதி காலை 11.30 மணியளவில், சுகஸ்தலா மருத்துவமனை எதிரில் உள்ள கும்பகோணம் டீ கடையில், டீ குடிக்க வந்த ரியல் எஸ்டேட் அதிபரும், கொலைக் குற்றவாளியுமான ஃபங்க் பாபுவை, ஒரு இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, தயாராகயிருந்த ஒரு இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பியுள்ளார்.


கழுத்தில் குறிவைத்து வெட்டப்பட்ட ஃபங்க் பாபு, சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். பாபுவை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தவர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட, திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த், தனி டீம்கள் அமைத்து குற்றவாளிகளைப் பிடிக்க உத்தரவிட்டார்.


இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறும்போது, வெட்டியவர் ஒருவர், அவர் 3 இளைஞர்களோடு இருசக்கர வாகனத்தில் தப்பியுள்ளார். அவர்களைப் பிடித்தால் மட்டுமே எதனால் இந்தக் கொலை நடைபெற்றது எனத் தெரியவரும் என்றார்கள்.


இந்தக் கொலை சரியாக ஸ்கெட்ச் போடப்பட்டு செய்து முடிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் தன் நண்பருடன் பாபு டீ கடைக்கு வர, பின்னால் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த கொலைகாரர், எந்தவிதப் பதட்டமும் இல்லாமல் சென்று, கடை வாசலில் வைத்து, தனி ஒருவனாக வெட்டியுள்ளார், உயிர் போகவேண்டும் என்றே கழுத்தில் குறிவைத்து வெட்டியதாகத் தெரிகிறது. வெட்டியவரோ அவரது நண்பர்களோ யாரும் முகத்தில் எந்த மாஸ்க்கும் போடவில்லை எனக் கூறப்படுகிறது. பாபுவின் நண்பர் வெட்டியவரைப் பிடிக்க முயல, அவர் அங்கிருந்து தப்பி ஒரு இருசக்கர வாகனத்தில் தயாராகயிருந்த தன் நண்பர்கள் மூன்று பேருடன் தப்பியது அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது.


கடந்த 2017 பிப்ரவரி 12ஆம் தேதி காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருமஞ்சனகோபுரம் அருகே அ.தி.மு.க பிரமுகரும், முன்னாள் அ.தி.மு.க ந.செவும், மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் இருந்த கனகராஜை, அவரது நண்பர்களான ஃபங்க் பாபு, ராஜா, சரவணன் என 3 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். கொலை செய்துவிட்டு அங்கிருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள திருவண்ணாமலை நகர காவல்நிலையத்தில் சரணடைந்தார்கள்.


கனகராஜ், ஃபங்க் பாபு இருவரும் நீண்ட கால நண்பர்கள், பாபு தி.மு.க.வில் தொழிலாளர் அணியில் பதவியில் இருந்தார். இருவரும் வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும் தொழில் ரீதியாக பார்ட்னராக இருந்தனர். ரியல் எஸ்டேட் தொழிலில் இருவருக்கும் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் கனகராஜை, பாபுவும் அவரது நண்பர்களும் இணைந்து கொடூரமாகக் கொலை செய்தனர். அந்தக் கொலை வழக்கு, திருவண்ணாமலை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் பாபுவுக்கு ஆதரவாக, வடமாவட்டத்தில் பிரபலமான வழக்கறிஞரான முன்னாள் எம்.பி ஒருவர் ஆஜரானார்.

 

cnc

 

இந்தக் கொலை வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பாபு, பல கட்டப் பஞ்சாயத்துகள், ரியல் எஸ்டேட் தகராறுகள், மிரட்டி இடம் வாங்குவது, அடிதடி என நகரை மிரட்டிக்கொண்டு இருந்தார். அதில் பாதிக்கப்பட்ட யாராவது கொலை செய்தார்களா அல்லது பாபுவால் கொலை செய்யப்பட்ட கனகராஜ் தரப்பைச் சார்ந்தவர்கள் கொலை செய்தார்களா என விசாரணை நடத்திவருகிறது காவல்துறை.
 

பட்டப் பகலில் ஒருவர், மக்கள் கண் முன்னால் கொலை செய்யப்பட்டது நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் நடனக் கலைஞருக்கு பாலியல் சித்ரவதை;3 பேர் மீது வழக்கு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
of female dancer; case against 3 people

பெண் நடனக் கலைஞரை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததோடு அரசியல் பிரமுகர்களுக்குப் பாலியல் ரீதியாக இணங்குமாறு கொடுமைப்படுத்தியதாக மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவருடைய தாயுடன் திருவிழாக்களில் நடனமாடும் தொழில் செய்து வந்தார். பல்வேறு குழுக்கள் இணைந்து நடனமாடி வந்த நிலையில், அண்மையில் கரூரைச் சேர்ந்த மதி என்பவருடைய நடனக் குழுவில் 22 வயதான அந்த பெண் இணைந்துள்ளார்.

பல்வேறு இடங்களில் திருவிழாக்களில் நடனமாடி வந்த நிலையில், அப்பெண்ணை பாலியல் ரீதியாக மதி வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அரசியல் கட்சியினர் சிலருக்கும் பாலியல் ரீதியாக இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுத்ததால் தனி அறையில் மூன்று நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெண்ணின் தாய் மகளைப் பார்க்க வந்தபொழுது சக நடனக் கலைஞர்கள் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தியது உறுதியானது. அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் மதி உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மூவரையும் தேடி வருகின்றனர்.

Next Story

'ஆன்மீக நகரமா? கஞ்சா நகரமா?'- நெரிசலில் ஊடுருவும் போதை வஸ்துக்கள்

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
 'Spiritual City? Ganja City?'- Narcotics seeping into the traffic

திருவண்ணாமலை நகரத்தில் பல இடங்களில் சர்வ சாதாரணமாக கஞ்சா கிடைக்கிறது, பள்ளி மாணவர்களுக்கே சுலமாக கிடைக்கும் நிலையிலேயே உள்ளது. இதனைத் தடுக்க வேண்டிய காவல்துறை தடுப்பதில் எந்த முயற்சியும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது என குற்றம் சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை நகர மன்ற கூட்டத்திலேயே கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் கஞ்சா குடிப்பவர்கள் அதிகரித்து விட்டார்கள் எங்கள் பகுதிகளில் கஞ்சா விற்கிறார்கள் என குற்றச்சாட்டுகளை வைத்தார்கள். அதன் பின்பும் நடவடிக்கை எடுக்கவில்லை. கிரிவலப் பாதையில் உள்ள சாமியார்களிடமும் கஞ்சா பழக்கம் அதீதமாக உள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை செய்தார்கள் என சமுத்திரம் காலணி பிரவீன்குமார், விக்னேஷ், காட்டு மலையனூர் சந்துரு ஆகிய மூவரை கைது செய்துள்ளது திருவண்ணாமலை நகரக் காவல் துறை. அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். 

இவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள இவர்களை விட பெரிய பெரிய கேங்க் எல்லாம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி காவல்துறை, பாண்டிச்சேரிக்கு திருவண்ணாமலையிலிருந்தே கஞ்சா வருகிறது என குற்றம் சாட்டியது.திருவண்ணாமலைக்கு ஆந்திராவிலிருந்து  கஞ்சா வருகிறது. இங்கிருந்து பல இடங்களுக்கு செல்வதாக அப்போதே பாண்டிச்சேரி காவல்துறை சார்பில் கூறப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையாரை கோவிலை தரிசிப்பதற்காக கிரிவலம் வருவதற்காக ஆந்திரா தெலுங்கானாவில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அந்த கூட்டத்தோடு கஞ்சா கடத்தல் கும்பல்களும் சேர்ந்து வந்து விடுகின்றன. அன்றைய தினம் காவல்துறையின் வாகன சோதனை எதுவும் இருக்காது என்பதால் கஞ்சாவைக் கொண்டு வந்து இங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு அனுப்புகிறார்கள் என்கிறார்கள்.

ஆன்மீக நகரம் என்பது வருங்காலத்தில் கஞ்சா நகரம் என பெயர் மாற்றம் அடைவதற்கு முன்பு காவல்துறை கஞ்சா கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.