Skip to main content

100 கோடி ஆண்டுக்கான வித்தியாசமான காலண்டர்; அசத்தும் மனிதர்!

Published on 09/10/2019 | Edited on 09/10/2019

 

உங்க பிறந்த தேதி, மாதம், வருடத்தை சொன்னால், எந்த கிழமை பிறந்தீர்கள் என்று பதில் சொல்கிறார்.  2025 ஜனவரி 15ந்தேதி தை பொங்கல் விழா. அன்று கிழமை என்ன? என்று கேட்டால் புதன்கிழமை என்று சரியாக சொல்கிறார்.  2050ல் டிசம்பர் 25 கிருஸ்மஸ், எந்த கிழமையில் வருகிறது என்று கேட்டால், ஞாயிற்றுக்கிழமை என்று உடனே சொல்லிவிடுகிறார்.

 

s

 

இப்படி தேதி, மாதம், வருடத்தை சொன்னால் அன்று என்ன கிழமை எனச்சொல்லி அசத்துகிறார் அந்த மனிதர். அவர் திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தாலுக்காவில் உள்ள கீழ்புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி. வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றுகிறார். இவர்தான் ஒரு அட்டவணையை கையில் வைத்துக்கொண்டு ஒரு நிமிடத்தில் கிழமையை சொல்கிறார். இப்படி 100 கோடி ஆண்டுகளுக்கு தன்னால் சொல்ல முடியும் என சவால்விடுகிறார்.

 

இதுப்பற்றி அவரிடம் நாம் கேட்டபோது, ’’எனக்கு சிறு வயது முதலே கணிதத்தில் ஆர்வம். கணித போட்டியென்றால் வித்தியாசமாக முயற்சி செய்வேன். அப்படித்தான் நமக்கு நம்முடைய பிறந்ததேதி, மாதம், ஆண்டு தெரியும். கிழமை  தெரியாது. ஒருசில ஆண்டு என்றால் சுலபமாக தேடி கண்டறிந்துவிடலாம், 20 ஆண்டுக்கு முந்தியது, 50 ஆண்டுக்கு முந்தியது, 100 ஆண்டுக்கு முந்தியது என்றால் எப்படி கண்டறிவது என யோசித்தேன்.

 

s

 

நாம் அதனை சுலபமாக கண்டறிய ஒரு காலண்டரை உருவாக்க வேண்டும் என முடிவு செய்து, அதற்கான வேலைகளில் ஈடுப்பட்டு 3 ஆண்டுகள் கடுமையான முறையில் கணக்கீடுகளை செய்து அட்டவணை 1, 2, 3, 4, 5, 6, 7 என 7 அட்டவணைகளை உருவாக்கினேன். முதல் அட்டவணை ஆண்டை குறிப்பிட்டும், இரண்டாவது டேபிள் மாதத்தை குறிப்பிட்டும், 3 முதல் 7 வரையிலான டேபிள் தேதி மற்றும் கிழமையை கொண்டு உருவாக்கினேன். நான் உருவாக்கிய அட்டவணையை கொண்டு யார் வேண்டுமானாலும் கிழமையை கண்டு பிடிக்கலாம். ஒருவர் பிறந்த ஆண்டு 1985 என்றால் கடைசி இரண்டு எண்கள் அதாவது 85 மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.  அதற்கு நேராக ஒரு ஆங்கில எழுத்து இருக்கும். அதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பிறந்த மாதத்துக்கு நேராக அந்த ஆங்கில எழுத்து எந்த வரிசையில் வருகிறது என அட்டவணையில் பார்க்க வேண்டும். அதற்கு நேராக கிழமை வரிசையில் அந்த எழுத்து எந்த வரிசையில் எந்த கிழமைக்கு நேராக வருகிறதோ அதுதான் நாம் தேடிய கிழமை. 100 கோடி ஆண்டுகளுக்கு கிழமையை அறிந்துக்கொள்ள முடியும்’’ என்றார்.

 

இந்த காலண்டரை ஆச்சர்யமாக பார்க்கும் பலரும் சுந்தரமூர்த்தியை பாராட்டி வருகின்றனர். அதோடு, பல வித்தியாசமான, அபூர்வமான புகைப்படங்கள் பழங்கால நாணயங்கள், தபால்தலைகளை சேகரித்து, அதனை கண்காட்சியில் வைத்து பலரின் பாராட்டையும் பெற்றுள்ளார். ஆனால், தன் மாவட்டத்தில் தனது உழைப்புக்கு ஏற்ற பாராட்டு கிடைக்கவில்லை என்கிற ஏக்கம் மட்டும் அவரிடத்தில் உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.