Advertisment

கலாஷேத்ரா கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு (படங்கள்)

சென்னை திருவான்மியூரில்உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பயிற்சியாளர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் ஒன்றாகச் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கல்லூரி வளாகம் மற்றும் நுழைவு வாயில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கல்லூரிக்குச் செல்லும் அனைவரும் சோதனைக்குப் பிறகு உள்ளேஅனுமதிக்கப்படுகின்றனர். மேலும் மாணவர்களின் பெற்றோர்களையும் வளாகத்திற்கு உள்ளே அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

parents students union government kalashetra police thiruvanmiyur Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe