Skip to main content

கட்டிடங்கள் சரியாக கட்டப்பட்டுள்ளதா? திடீர் ஆய்வு செய்த எம்.எல்.ஏ...ஒப்பந்ததாரர்கள் கலக்கம்!

Published on 25/08/2019 | Edited on 25/08/2019

எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களுக்கு ஆண்டு தோறும் மத்திய, மாநில அரசுகள் தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியை ஒதுக்கீடு செய்கின்றனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி நிதியை தொகுதியில் உள்ள மக்களுக்கு என்ன தேவையோ? அதனை பூர்த்தி செய்ய இந்த  நிதியை எம்.பி, எம்.எல்.ஏக்கள் செலவழிக்கின்றனர். அந்த நிதியை கொண்டு கட்டப்படும் கட்டிடங்களையோ? அல்லது மற்ற திட்ட பணிகளையோ? பெரும்பாலான எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மேற்பார்வையிடாமல் இருக்கின்றனர். பின்னர் பணிகள் முடிந்து அதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் மட்டும் கலந்துக் கொண்டு விட்டு வந்து விடுகின்றனர். ஒரு சில எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மட்டும், தான் ஒதுக்கிய நிதியை சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? ஒப்பந்ததாரர்கள் சரியாக பணிகளை செய்கிறார்களா? என கண்காணிப்பார்கள்.

thiruvanamalai keelpennaththur assembly mla sudden visit building contractors shock



திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி (திமுக) தனது தொகுதி நிதியில் இருந்து தி.கல்லேரி ஊராட்சிக்குட்பட்ட சமுக்குடையாம்பட்டு கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்காக ரூபாய் 8 லட்சமும், விருதுவிளங்கினான் ஊராட்சியில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் ரூபாய் 2 லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு அமைத்து மினிடேங்க் அமைத்து தரவும், சு.வாளவெட்டி ஊராட்சியில் ஈமசடங்கு மண்டபம் கட்டி தர ரூபாய் 3 லட்சமும், காடகமான் ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர ரூபாய் 2 லட்சமும் தனது தொகுதி மேம்பாட்டு வளர்ச்சியில் இருந்து கடந்த நிதி ஒதுக்கியிருந்தார். அந்த நிதியை கொண்டு கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் கட்டிடங்கள் கட்டப்பட்டும், ஆழ்துளை கிணறு அமைத்தும், சுற்றுச்சுவர் கட்டியும் முடித்துள்ளனர்.

 

thiruvanamalai keelpennaththur assembly mla sudden visit building contractors shock


இந்த தகவல் தொகுதி எம்.எல்.ஏ என்கிற முறையில் பிச்சாண்டிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தான் ஒதுக்கிய நிதி, சரியாக ஒழுங்காக செலவிட்டு, பலமாக கட்டிடங்களை கட்டியுள்ளார்களா? கட்டப்பட்ட கட்டிங்களுக்கு சரியாக போக்குவரத்துக்கான வழிகள் உள்ளதா? ஆழ்துளை கிணற்றில் இருந்து சரியாக நீர் வருகிறதா? என சம்மந்தப்பட்ட கிராமங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். அந்த கிராமங்களில் வேறு ஏதாவது குறைப்பாடுகள் உள்ளதா? என மக்களிடம் கேட்டறிந்தார். அதன் தொடர்ச்சியாக கிராமங்களுக்கு ஏதாவது தேவையென்றால் நேரடியாக என் கவனத்துக்கு கொண்டு வாருங்கள் என்று கட்சியின் நிர்வாகிகளை அறிவுறுத்தியுள்ளார். 


இந்த அங்கன்வாடி மையம், ஆழ்துளை கிணறு, தகனமேடை போன்றவற்றுக்கு திறப்பு விழாவை உடனடியாக நடத்தி, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் வேண்டுக்கோள் வைத்துள்ளார் பிச்சாண்டி என்பது குறிப்பிடதக்கது. தி.கல்லேரியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "கட்டிடம் கட்டும் போதே அதிகாரிகளோடு, எம்.எல்.ஏ ஒருமுறை வந்து பார்த்து விட்டு சென்றார். அதனால் தான் ஒப்பந்தம் எடுத்தவர்கள் பயத்தோடு சரியா கட்டியிருக்காங்க. கட்டடம் கட்டி முடிச்சப்பிறகும் வந்து பார்த்துட்டு போயிருக்கார். இதுக்காகவே எம்.எல்.ஏவை பாராட்டலாம்" என்றார்.  



 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.