Skip to main content

எச்சரித்த அமைச்சர்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்; வேதனையில் மக்கள்

Published on 09/12/2022 | Edited on 09/12/2022

 

Thiruvanamalai girivalam government officials violated Minister warning

 

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தீபத்திருவிழாவிற்கு முன்பு அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்ட முன்னேற்பாடு கூட்டங்கள் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் பத்துமுறை நடைபெற்றன. மூன்று  கூட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் வேலு அதிகாரிகளிடம் பேசும்போது, தீபத் திருவிழா நாட்களில் இருசக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் நுழைவு கட்டணம், பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.

 

திருவிழா நாட்களில் திருவண்ணாமலை நகரம், கிரிவலப்பாதையில் சிறு சிறு வியாபாரக் கடைகள் வைக்கப்படுகின்றன. இந்தக் கடைகளில் தினசரி வாடகை என்கிற பெயரில் நகராட்சி மற்றும் ஊராட்சிகள் வசூலிப்பதாக புகார்கள் உள்ளன. கடந்த காலத்தில் தனக்கே வசூல் செய்வதாக புகார்களும் வந்துள்ளதாக தெரிவித்திருந்தார். அப்படி வசூலிப்பது தொடர்பாக புகார்கள் வந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

 

கடந்த 10 ஆண்டுகளாக திருவிழா மற்றும் பெளர்ணமி நாட்களில் வாகனக் கட்டணம் வசூலிக்க நகராட்சி தடை விதித்துள்ளது. ஆனால் நகரத்திற்கு வரும் சாலைகளில் வாகனங்களை மடக்கி அந்தந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் நகராட்சி பெயரைச் சொல்லி ரூ 50, 100 என வசூல் செய்கின்றனர். தீபத்திருவிழா மற்றும் பெளர்ணமி நாளில் தண்டராம்பட்டு சாலை, மணலூர்பேட்டை சாலை, திருக்கோவிலூர் சாலை, விழுப்புரம் சாலை, காஞ்சி சாலை வழியாக வாகனங்களில் வந்தவர்கள் மக்கள் நெருக்கடியால் நகரத்துக்குள் வரமுடியாமல் சாலை ஓரம் இருசக்கர வாகனம், கார், வேன், பேருந்து நிறுத்தியதற்கு கட்டணம் வசூல் செய்துள்ளனர். 

 

Thiruvanamalai girivalam government officials violated Minister warning

 

திருவிழா தினங்களில் நகரத்தில் சாலையோரம் கடை வைத்திருந்தவர்களிடம் ஒருநாள் வாடகை ரூபாய் 200 முதல் 500 வரை வசூல் நடத்தினர். கிரிவலப் பாதையில் கடை வைத்திருந்தவர்களிடமும் அந்தந்த ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் கட்டணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்தியந்தல் ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்ற தலைவரின் கையொப்பமிட்ட கட்டண ரசீது புத்தகத்துடன் ஒவ்வொரு கடையாக சென்று கட்டணம் வசூலித்தனர். வீடியோ எடுத்த செய்தியாளரையும் அத்தியந்தல் ஊராட்சி மன்றத் தலைவரின் உத்தரவின் பெயரில் வசூலில் ஈடுபட்டவர்கள் மிரட்டினர். 

 

அனைத்துத்துறை அதிகாரிகள் கூட்டத்தில், தீபத்திருவிழா நாளில் சட்டவிரோதமாக வாகனக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் வந்துள்ளன. அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், அமைச்சர் சொன்னதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்பதையே இந்தாண்டும் வசூல் நடந்தது உறுதி செய்தது. 

 

வருங்காலங்களில் காவல்துறை மற்றும் நகராட்சி, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவிழா நாட்களில் கட்டணம் இல்லை என்பதை வெளியூர், வெளிமாவட்ட, வெளிமாநில பக்தர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மிரட்டி வசூல் செய்பவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.